“அடப்பாவிங்களா !படிக்க அனுப்பின பொண்ணை பொணமாக்கிட்டிங்களே “பள்ளியில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோர் கதறல்..
பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு 14 வயது மாணவி ,பள்ளியின் வகுப்பறையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பள்ளி மாணவர்களிடையே பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது.
ஆனால் அதை பொருட் படுத்தாத பள்ளி நிர்வாகம் ,சில ஆவணங்களில் பெற்றோரிடம் கையெழுத்து வாங்கிவிட்டு ,குடும்ப பிரச்சனையால் அவர் தற்கொலை செய்ததாக கூறி போலீசார் உதவியுடன் அடக்கம் செய்து விட்டனர் .மேலும் அவரின் தற்கொலை குறிப்பில் தனது சாவுக்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பல்ல ,குடும்ப பிரச்சினையே காரணம் என்று எழுதியுள்ளதாக போலீசார் கூறுகிறார்கள் .
இதனால் அந்த பெண்ணின் பெற்றோர் முதல்வருக்கு மகளின் சாவிலிருக்கும் மர்மத்தை கண்டறிய கோரி மனு அளித்தார்கள் .