×

“கழுத்தை நெரித்து ,முகத்தை எரித்து …”மதிக்காத மச்சானுக்கு மாப்பிள்ளையால் நேர்ந்த கதியை பாருங்க..

மதிக்காத மச்சானை, அவருடைய மாப்பிளையும் அவரின் சகோதரரும் சேர்ந்து எரித்து கொன்ற சம்பவம், மாப்பிள்ளையை மதிக்காத மாமியார் வீட்டினரிடையே பீதியை உண்டாகியுள்ளது. உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் அமன் என்ற நபர் ,அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெண்ணெடுத்தார் .அமனுக்கு திருமணம் ஆனதிலிருந்து அவரின் மாமியார் வீட்டில் மதிப்பதில்லையாம் .இதனால் மனதுக்குள் கருவிக்கொண்டிருந்த அமன் ,மாமியார் குடும்பத்தை பழிவாங்குவதற்கு சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார் . இரண்டு நாட்களுக்கு முன்பு பத்லாப்பூர் காவல் நிலையத்திற்கு அருகே ,அமன்
 

மதிக்காத மச்சானை, அவருடைய மாப்பிளையும் அவரின் சகோதரரும் சேர்ந்து எரித்து கொன்ற சம்பவம், மாப்பிள்ளையை மதிக்காத மாமியார் வீட்டினரிடையே பீதியை உண்டாகியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் அமன் என்ற நபர் ,அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெண்ணெடுத்தார் .அமனுக்கு திருமணம் ஆனதிலிருந்து அவரின் மாமியார் வீட்டில் மதிப்பதில்லையாம் .இதனால் மனதுக்குள் கருவிக்கொண்டிருந்த அமன் ,மாமியார் குடும்பத்தை பழிவாங்குவதற்கு சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார் .

இரண்டு நாட்களுக்கு முன்பு பத்லாப்பூர் காவல் நிலையத்திற்கு அருகே ,அமன் மற்றும் அவரின் சகோதர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர் .அப்போது அவரின் மச்சான் பாபி அந்த வழியாக வந்துள்ளார் .உடனே சகோதரர்கள் இருவரும் சேர்ந்து ,மச்சான் பாபியை அருகிலுள்ள புதர் பக்கம் இழுத்து சென்று கழுத்தை நெரித்து கொன்றனர் .பிறகு அடையாளம் தெரியாமலிருக்க அவரின் முகத்தை எரித்து அருகிலுள்ள ஒரு பாழடைந்த வீட்டினுள் வீசிவிட்டு சென்று விட்டனர் ..

இரண்டு நாள் கழித்து அந்த பழைய வீட்டிலிருந்து பிணவாடை வருவதை கண்ட அந்த பகுதி மக்கள், போலீசில் புகாரளித்தனர் ,விரைந்து வந்த போலீஸ் அந்த பிணத்தை கைப்பற்றி விசாரித்த போது ,அவரை அவரின் மாப்பிள்ளை அமன் மற்றும் சிலர் சேர்ந்து எரித்துக்கொன்ற விஷயம் தெரிந்தது .பிறகு போலிசார் அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்