×

"தாலியை கழட்டி வீசிட்டு,போனை  ஆஃப்  பண்ணிட்டு .. "புது பெண் செஞ்ச காரியத்தால் கதறும் மாப்பிள்ளை  

 


 

தாலியை கழற்றி வைத்து விட்டு ஒரு புதுப்பெண் வீட்டை விட்டு வெளிேயறியதால் ,அந்த கணவரின் புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர் 
தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா சீம்மளம் கிராமத்தைச் சேர்ந்த 33 வயதான  யுவராஜ் , ஒரு தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.


இவருக்கும், சென்னை புறநகர் பகுதியான பூந்தமல்லி தாலுகா அரண்வாயில் பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஜெயஸ்ரீ என்பவருக்கும் கடந்த 6-ந் தேதி மேல்பேட்டையில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் கோலாகலமாக திருமணம் நடந்தது. 
பின்னர் திருமணம் முடிந்து அந்த ஜெயஸ்ரீ கணவர் வீட்டுக்கு வந்தார் .அந்த கணவர் அந்த புது மனைவியை வீட்டில் உறவினருடன் இருக்க சொல்லி விட்டு வெளியே சென்று விட்டார் .பின்னர் கணவர் வெளியே போனதும் அந்த ஜெய ஸ்ரீ ,விறுவிறுவென்று தன்னுடைய புது தாலியை கழட்டி வீசினார் ,பிறகு போனை சுவிட்ச் ஆப் செய்தார் .அதன் பின்னர் ஒரு பேப்பரில் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு ,யாருக்கும் தெரியாமல் வீட்டின் தோட்டம் வழியே ஓடி விட்டார் .பின்னர் புது மனைவியை தேடி வந்த கணவரும் அவரின் சகோதரரும் அவர் காணாததை கண்டு அவருக்கு போன்  செய்த போது, அது ஸ்விச் ஆப் செய்யப்பட்டிருந்ததையும் ,வீட்டில் தாலியும் அதன் அருகே அவர் எழுதிய லெட்டரையும் பார்த்து போலீசில் புகார் கொடுத்தனர் .போலீசார் வழக்கு பதிந்து அந்த புது பெண்ணை தேடி வருகின்றனர்