“ஊடகத்தில் நண்பராகி ,பலாத்காரத்துக்கு பலியாகி ….”உஷார்! டீனேஜ் பெண்களை குறிவைக்கும் கூட்டம் ..
சமூக ஊடகத்தில் ஒரு 13 வயது பெண்ணுக்கு திடீர் நண்பராகி ,அவரை மதி மயக்கி ஒரு இளைஞர் கூட்டம் அவரை கடத்திக்கொண்டு போய் பலாத்காரம் செய்த சம்பவம் டீனேஜ் பெண்களின் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையின் அக்ரிபாடாவில் ஒரு 13 வயது சிறுமி எந்நேரமும் சமூக ஊடகத்திலேயே இருப்பார் .அதில் அவர் நண்பர்களுடன் எந்நேரமும் அரட்டையடித்துக்கொண்டிருப்பார் .அப்போது ஊடகத்தில் ஒரு இளைஞர் புதிதாக அவருக்கு நண்பரானார்.அவரின் பேச்சால் மதிமயங்கிய அந்த டீனேஜ் பெண் எந்நேரமும் அவரோடு ஊடகத்தில் அரட்டையடித்துக்கொண்டிருந்தார் .
ஒரு வாரமாக மகளை காணாத அவரின் பெற்றோர் ஜூலை 1ம் தேதி போலீசில் புகார் தந்தனர் .போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் ,அந்த பெண்ணின் ஊடக நண்பர்கள் கொடுத்த உதவி குறிப்பின் உதவியால் 2 இடங்களில் சோதனைகள் நடத்தினர்.