×

3 மாத சிசுவை அண்டா நீரில் மூழ்கடித்து கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்ட தாய்: ஈரோட்டில் பரபரப்பு!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த மூங்கில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இதையடுத்து சங்கீதா இரண்டாவது முறையாக மீண்டும் கருத்தரித்துள்ளார். அதனால் இரண்டாவதாக பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என சங்கீதா எண்ணியதாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மீண்டும் பெண் குழந்தையே பிறந்துள்ளது. இதனால் சங்கீதா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பிறந்து 3 மாதங்களே
 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த மூங்கில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இதையடுத்து சங்கீதா இரண்டாவது முறையாக மீண்டும் கருத்தரித்துள்ளார்.

அதனால் இரண்டாவதாக பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என சங்கீதா எண்ணியதாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மீண்டும் பெண் குழந்தையே பிறந்துள்ளது. இதனால் சங்கீதா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் பிறந்து 3 மாதங்களே ஆன தனது குழந்தையை அண்டா தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பெருந்துறை போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.