×

“எடுங்கடா வண்டிய ,புடிங்கடா அவளை” -மகனின் காதலியை கடத்திய தாய்.

ஒரு பெண்ணை காதலிக்கும் காதலனின் தாயே, அவரின் காதலியை கடத்திக்கொண்டு போய் மகனுக்கு கட்டி வைக்க முற்ப்பட்டபோது பிடிபட்டார். பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தன்னுடைய தாயோடு வசிக்கும் 16 வயதுசிறுமியை அதே ஊரைசேர்ந்த அபிஷேக் என்ற 19 வயது வாலிபர் காதலித்து வந்துள்ளார் .அதனால் அந்த பெண் போகும்போதும் வரும்போதும் அந்த பெண்ணிடம் அந்த வாலிபர் வம்பு செய்வாராம் ,இடிப்பாராம் ,இப்படி பலமுறை ஈவ் டீசிங் செய்துள்ளார் .இந்நிலையில் அந்த பெண்ணை அவர் திருமணம்
 


ஒரு பெண்ணை காதலிக்கும் காதலனின் தாயே, அவரின் காதலியை கடத்திக்கொண்டு போய் மகனுக்கு கட்டி வைக்க முற்ப்பட்டபோது பிடிபட்டார்.

பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தன்னுடைய தாயோடு வசிக்கும் 16 வயது
சிறுமியை அதே ஊரைசேர்ந்த அபிஷேக் என்ற 19 வயது வாலிபர் காதலித்து வந்துள்ளார் .அதனால் அந்த பெண் போகும்போதும் வரும்போதும் அந்த பெண்ணிடம் அந்த வாலிபர் வம்பு செய்வாராம் ,இடிப்பாராம் ,இப்படி பலமுறை ஈவ் டீசிங் செய்துள்ளார் .இந்நிலையில் அந்த பெண்ணை அவர் திருமணம் செய்துகொள்ள விரும்பியுள்ளார் .ஆனால் அந்த பெண் அவரை காதலிக்கவில்லை .இதனால் இந்த காதல் விஷயத்தை அபிஷேக் தன்னுடைய அம்மா மனீஷாவிடம் கூறியுள்ளார் .


அதை கேட்ட அவரின் தாய் அந்த மகனை கண்டிக்காமல் ,அவரின் காதலுக்கு உதவி புரிவதாகவும் ,அந்த பெண்ணையே அவருக்கு கல்யாணம் செய்து கொடுப்பதாகவும் கூறியுள்ளார் .அதன் படி கடந்த 23ம் தேதியன்று இரவு ஆறு பேரை கூட்டிக்கொண்டு அந்த பெண்ணின் வீட்டிற்குள் சென்றுள்ளார் .அப்போது அங்கே தூங்கிகொன்றிருந்த அந்த பெண்ணை அனைவரும் சேர்ந்து தூக்கி வந்துள்ளார்கள்.அந்த பெண்ணை தூக்கி கொண்டு வந்த ஆறு பேரில் அந்த காதலன் அபிஷேக்கின் தாயும் ,சகோதரியும் அடங்குவார்கள் .அப்படி அவர்கள் தூக்கிவரும்போது அதை தடுத்த அந்த பெண்ணின் தாயை அவர்கள் தாக்கியுள்ளனர் .இதனால் காயமுற்ற அந்த தாய் அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகாரளித்தார் .போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணையும் , அவரை கடத்திய அபிஷக், அவரின் தாயார் மனிஷா உள்பட ஆறுபேரினை கைது செய்தனர் .