×

‘தூக்கில் தொங்கிய படி அழுகிய நிலையில் கிடந்த தாய், மகள்’ தப்பியோடிய கணவன்: அதிரவைக்கும் சம்பவம்!

சென்னை, தரமணி பள்ளிப்பட்டு பகுதியில் வசித்து வந்த தம்பி கீத கிருஷ்ணன்- கல்பனா(36). இவர்களுக்கு குனாளிஸ்ரீ(14) மானசா(4) என்ற 2 மகள்கள் இருந்தனர். இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கிருஷ்ணனின் வீடு பூட்டிக் கிடந்ததோடு துர்நாற்றம் வீசியுள்ளது. சந்தேகமடைந்த வீட்டு உரிமையாளர், கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கல்பனா அழுகிய நிலையில் தூக்கிய தொங்கியபடி கிடந்ததைக் கண்டு
 

சென்னை, தரமணி பள்ளிப்பட்டு பகுதியில் வசித்து வந்த தம்பி கீத கிருஷ்ணன்- கல்பனா(36). இவர்களுக்கு குனாளிஸ்ரீ(14) மானசா(4) என்ற 2 மகள்கள் இருந்தனர். இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கிருஷ்ணனின் வீடு பூட்டிக் கிடந்ததோடு துர்நாற்றம் வீசியுள்ளது. சந்தேகமடைந்த வீட்டு உரிமையாளர், கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கல்பனா அழுகிய நிலையில் தூக்கிய தொங்கியபடி கிடந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல, குனாளிஸ்ரீயும் வாயில் நுரை தள்ளிய நிலையில் சடலாமாகக் கிடந்துள்ளார். அவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வீட்டில் இருந்து 2 கடிதங்களை கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில், கோதண்டபானி மற்றும் சந்திரசேகர் ஆகியோர் தங்களை மோசடி செய்து விட்டதால் தற்கொலை செய்து கொள்வதாகவும் மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் என கீத கிருஷ்ணன் எழுதியிருக்கிறார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வீட்டில் இருந்த அவர்களின் புகைப்படத்தை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கீத கிருஷ்ணன் அவரது மனைவியையும் மகளையும் கொலை செய்து விட்டு ஓடி விட்டாரா? திசை திருப்புவதற்காக அந்த கடிதத்தை எழுதி வைத்திருக்கிறாரா? என பல கோணங்களில் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். இதனிடையே, கல்பனாவின் செல்போனை எடுத்துக் கொண்டு இரண்டாவது மகளையும் தூக்கிக் கொண்டு தலைமறைவான கீத கிருஷ்ணனை, ஐ.எம்.இ.ஐ நம்பரை தேடி வந்த போலீசார், இன்று காலை கோயம்பேடு அருகே கைது செய்துள்ளனர்.