×

"குரங்கை பிடித்து ,கூண்டில் அடைத்து.." -குரங்குகளுக்கு காட்டுக்குள் நடந்த கொடுமை 

 

உணவில் விஷம் கலந்து கொடுத்து 20 குரங்குகளை கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. 

கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயல்கோலார் புறநகர் டகமா பகுதியில் நேற்று ஒரு பெரிய சாக்கு மூட்டை மர்மமான முறையில் கிடந்தது. அதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இதுபற்றி கல்பேட்டை போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசாரும், வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த சாக்கு மூட்டையை கைப்பற்றி பிரித்து பார்த்தனர். அப்போது அந்த சாக்கு மூட்டையில் 20-க்கும் மேற்பட்ட குரங்குகளின் உடல்கள் இருந்தன. 

அந்த இறந்த குரங்குகளை கைப்பற்றி வனத்துறையினரும் ,போலீசாரும் அந்த பகுதியில் விசாரணை நடத்தினர் .அப்போது சில மர்ம நபர்கள் அந்த வனப்பகுதியில் உள்ள குரங்குகளை பிடித்து ,அவைகளை கூண்டில் அடைத்து ,விஷம் கலந்த உணவை அவற்றுக்கு கொடுத்து கொலை செய்ததை கண்டறிந்தனர் .பின்னர் அவர்கள் அந்த இறந்த குரங்குகளை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி ,வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வைத்திருந்த போது அந்த குரங்குகள் போலிசில் சிக்கியது .போலீசார் இந்த குரங்குகளை எதனால் இப்படி கொலை செய்தார்கள் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 

இச்சம்பவம் குறித்து கல்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குரங்குகளை கொன்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.