×

“விவாகரத்தான பெண்ணும் ,நோட்டமிட்ட கண்ணும்” இன்டர்நெட் கனெக்க்ஷன் கொடுக்க வந்தவர்கள் செஞ்ச வேலை .

ஒரு விவகாரத்தான பெண்ணை இரு வாலிபர்கள் வீடு புகுந்து துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது வடகிழக்கு டெல்லியின் மன்சரோவர் பார்க் பகுதியில் ஷாமா கான் என்ற பெண் தன்னுடைய மகள்களோடு கணவரை பிரிந்து தனியே வசித்து வருகிறார் ,அவருக்கும் அவரின் கணவரும் கருத்து வேறுபாடு மற்றும் சொத்து பிரச்சனை காரணமாக பிரிந்துள்ளார்கள் .இதற்கிடையே அந்த பெண் தன்னுடைய குடுமபத்தோடு கடந்த திங்கள்கிழமையன்று இரவு 7.30 மணியளவில் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தார் .அப்போது அவரின் வீட்டில்
 

ஒரு விவகாரத்தான பெண்ணை இரு வாலிபர்கள் வீடு புகுந்து துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது


வடகிழக்கு டெல்லியின் மன்சரோவர் பார்க் பகுதியில் ஷாமா கான் என்ற பெண் தன்னுடைய மகள்களோடு கணவரை பிரிந்து தனியே வசித்து வருகிறார் ,அவருக்கும் அவரின் கணவரும் கருத்து வேறுபாடு மற்றும் சொத்து பிரச்சனை காரணமாக பிரிந்துள்ளார்கள் .
இதற்கிடையே அந்த பெண் தன்னுடைய குடுமபத்தோடு கடந்த திங்கள்கிழமையன்று இரவு 7.30 மணியளவில் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தார் .அப்போது அவரின் வீட்டில் இன்டர்நெட் கனக்க்ஷன் கொடுக்க இருவர் வந்தார்கள் .அவர்கள் அவரின் வீட்டின் கதவை தட்டியதும் அவர்கள் உணமையிலேயே இன்டர்நெட் கணக்க்ஷன் கொடுப்பதாக நினைத்து அந்த பெண் கதவை திறந்தார் .அப்போது உள்ளே வந்த அந்த இரு வாலிபர்களும் அந்த பெண்ணின் வாயை துணியால் அடைத்தார்கள் .இன்னொருவர் சத்தம் வெளியே கேட்காமலிருக்க ஸ்பீக்கர் கன்னெக்ட் செய்து சத்தமாக பாட்டை ஒலிபரப்பினார் .
அதன் பிறகு இருவரும் அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டார்கள் .இன்னொருவன் அந்த பென்னின் மகளை பார்த்து துப்பாக்கியால் சுட்டார் .இந்த துப்பாக்கி சூட்டில் அந்த பெண் அந்த இடத்திலேயே இறந்தார் .அதை பார்த்ததும் அந்த இரு குற்றவாளிகலும் அங்கிருந்து தப்பியோடி விட்டார்கள் .அதன் பிறகு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரது மகள் மெஹாக்கை சுவாமி தயானந்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்கள்
இந்த டெல்லி பெண் கொலைபற்றி பொலிஸ் குழு விசாரணை நடத்திய போது, பல நாள் அந்த பெண்ணை நோட்டமிட்டவர்களால் இந்த கொலை நடந்துள்ளது என்றனர் .இதற்கு காரணம் சொத்து பிரச்சினையா அல்லது குடும்ப பிரச்சினையா அல்லது தவறான உறவு காரணமா என்று போலீசார் பலவிதமான கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

.