×

“இரவு முழுவதும் உறவு கொண்ட காதலர்கள் ..”காலையில் பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இரு காதலர்களை அவர்களின் பெற்றோர் பிரித்ததால் மனமுடைந்த அவர்கள் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கினார்கள் . ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் வசிக்கும் ஜீத்து என்ற 26 வயது நபர் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 18 வயதான இளம் பெண்ணை காதலித்து வந்தார் . இருவரும் தங்களின் காதலை கல்யாணத்தில் முடிக்க முயன்று வந்தார்கள் அதனால் அந்த வாலிபர் அந்த பெண்ணின் தந்தையிடம் சென்று தான் தங்களின் மகளை காதலிப்பதாகவும் அதனால் உடனே கல்யாணம் செய்து கொடுக்கும்படியும்
 

இரு காதலர்களை அவர்களின் பெற்றோர் பிரித்ததால் மனமுடைந்த அவர்கள் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கினார்கள் .

ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் வசிக்கும் ஜீத்து என்ற 26 வயது நபர் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 18 வயதான இளம் பெண்ணை காதலித்து வந்தார் . இருவரும் தங்களின் காதலை கல்யாணத்தில் முடிக்க முயன்று வந்தார்கள் அதனால் அந்த வாலிபர் அந்த பெண்ணின் தந்தையிடம் சென்று தான் தங்களின் மகளை காதலிப்பதாகவும் அதனால் உடனே கல்யாணம் செய்து கொடுக்கும்படியும் கேட்டார் .ஆனால் அந்த பெண்னின் தந்தையோ கூலி தொழிலாளியான உனக்கு பெண்ணை கல்யாணம் செய்து தர முடியாது என்று கூறினார் .
அதன்பிறகு அந்த பெண்ணின் தந்தை அவசர அவசரமாக தன்னுடைய பெண்ணுக்கு வேறொரு வாலிபரை கல்யாணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்தார் .அவர்களின் திருமணம் நவம்பர் 30ம் தேதியன்று நடக்க இருந்தது .இந்நிலையில் அந்த பெண்ணின் திடீர் திருமண விஷயத்தை கேள்விப்பட்ட அந்த காதலன் மிகவும் மன வேதனைக்குள்ளானார் .அதனால் தன்னுடைய காதலியை தனியே கடந்த வியாழக்கிழமையன்று ஒரு இடத்திற்கு வர சொன்னார் .அதை கேட்டு அந்த பெண் தன்னுடைய தந்தையிடம் துணி வாங்க போவதாக பொய் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார் .அப்போது அவருக்காக காத்திருந்த காதலன் அந்த பெண்ணோடு அன்று இரவு முழுவதும் உல்லாசமாக இருந்தார் .பின்னர் அதிகாலையில் இருவரும் அங்குள்ள மரத்தில் தூக்கு போட்டுகொண்டு இறந்தார்கள் .மறுநாள் வரை தன்னுடைய மகளை காணாத தந்தை போலீசில் புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து அவர்களிருவரும் தூக்கில் தொங்குவதை கண்டு பிடித்தார்கள் .அதன் பின்னர் இருவரின் சடலத்தையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள் ,மேற்கொண்டு விசாரித்து வருகிறார்கள் .