×

சிறுமி பாலியல் பலாத்காரம்… கழுத்தை நெரித்து கொலை செய்து புதரில் வீசிய கொடூரம்!

மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி ஒருவர் 22 வயது இளைஞரால் பாலியல் பலாத்காரம் செய்து கழுத்து நெரிக்கப்பட்டார். பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சையின் போது உயிரிழந்தார். இதை அடுத்து குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெய்த்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். 11 ஆம் வகுப்பு மாணவி கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அருகிலுள்ள கோவிலுக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள்
 

மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி ஒருவர் 22 வயது இளைஞரால் பாலியல் பலாத்காரம் செய்து கழுத்து நெரிக்கப்பட்டார். பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சையின் போது உயிரிழந்தார். இதை அடுத்து குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெய்த்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். 11 ஆம் வகுப்பு மாணவி கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அருகிலுள்ள கோவிலுக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் தேடத் தொடங்கி உள்ளனர். புதன்கிழமை காலை, சிறுமி தனது வீட்டின் அருகே புதரில் மயக்கத்தில் கிடந்ததை உறவினர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த சிறுமி ஷாடோல்ஸ் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிறுமி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை மாலை இறந்துவிட்டார்.


இதையடுத்து போலீஸ் நடத்திய விசாரணையில், சிறுமியை ஆரிஃப் கான் என்ற 22 வயது இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யும் நோக்கத்தில் கழுத்தை நெரித்துள்ளார். பின்னர் சிறுமி மயங்கிவிடவே இறந்துவிட்டதாக நினைத்து புதரில் வீசிவிட்டு சென்றுள்ளார். விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். குற்றம் சாட்டப்பட்டவர் மீது பாலியல் பலாத்காரம், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டம் மற்றும் கொலை தொடர்பான ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,