×

பெண் வழக்கறிஞரை மிரட்டி பாலியல் வன்கொடுமை ! கழுத்தை நெரித்துவிட்டு நகைகளுடன் குற்றவாளி ஓட்டம்!!

டெல்லியில் உள்ள ஜங்புரா பகுதியில் பெண் வழக்கறிஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அவரது உடமைகள் திருடப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் முதலில் திருடுவதற்காக அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்தார், ஆனால் அந்த பெண் அந்த வீட்டில் தனியாக இருப்பதைக் கண்டதும், கொலை செய்வதாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவரை கழுதை நெறித்துள்ளார். அவர் இறந்து விட்டதாக நினைத்து அங்கிருந்து குற்றவாளி தப்பி உள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அந்த
 

டெல்லியில் உள்ள ஜங்புரா பகுதியில் பெண் வழக்கறிஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அவரது உடமைகள் திருடப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் முதலில் திருடுவதற்காக அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்தார், ஆனால் அந்த பெண் அந்த வீட்டில் தனியாக இருப்பதைக் கண்டதும், கொலை செய்வதாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவரை கழுதை நெறித்துள்ளார். அவர் இறந்து விட்டதாக நினைத்து அங்கிருந்து குற்றவாளி தப்பி உள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அந்த பெண் வீட்டிற்கு திருடுவதற்காக சென்ற அந்த நபர் சத்தம் போட்டால், கொலை செய்வேன் என்று மிரட்டியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் சோனு என்று தெரிவித்த காவல்துறை அவரை சிசிடிவி காட்சிகள் மூலம் தேடிப்பிடித்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட சோனு “அவர் அந்த பெண்ணின் வீட்டைத் திருடும் நோக்கத்துடன் நுழைந்துவிட்டார், அந்தப் பெண்ணை தனியாகப் பார்த்தபோது, அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் ” என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாலியல் பலாத்காரத்திற்குப் பிறகு அவர் பெண் வழக்கறிஞரை கழுத்தை நெரித்துள்ளார். தொண்டையை நெருக்கிய பின் அந்தப் பெண் மயக்கம் அடைந்துள்ளார். பெண் இறந்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர் நினைத்து அவரின் டெபிட் கார்டு, வீட்டில் வைத்திருந்த பணம் மற்றும் சில முக்கியமான பொருட்களுடன் தப்பி ஓடிவிட்டார்.