×

"முதல்ல பவுடர் மசாஜ் ,அடுத்து பலான மசாஜ்" -17 வயதான பெண்ணை வைத்து லட்சங்களை குவித்த  பெண். 

 

ஒரு மசாஜ் சென்டரில் மசாஜ் செய்து விட்ட ஒரு 17 வயதான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தனியார் நிறுவன ஊழியர் இருவர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி அண்ணா நகரில் ஒரு  மசாஜ் சென்டர் இயங்கி வருகிறது .இந்த மசாஜ் செண்ட்டரை ஒரு பெண் நடத்தி வருகிறார் .அங்கு பல பெண்கள் அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு மசாஜ் என்ற பெயரில் பலான வேலை செய்து வந்தனர் .இதை அதை நடத்தி வரும் அந்த முதலாளி பெண் ஊக்குவித்தார் .இந்த மசாஜ் சென்டருக்கு சமீபத்தில் ஒரு 17 வயதான பெண்ணை மசாஜ் செய்யும் வேளைக்கு சேர்த்தனர் .ஆனால் அந்த பெண்ணை அந்த உரிமையாளர் அங்கு வரும் ஆண்களிடம் பலான வேலையில் ஈடுபட வைத்துள்ளார் .அதனால் அங்கு வந்த சிலர் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் .இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிய வந்துள்ளது 

அதனால் போலீசார் கடந்த வாரம்  அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபசார தொழிலில் ஈடுபட்ட 4 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதில் ஒருவர் 17 வயது சிறுமி என தெரியவந்தது.மசாஜ் சென்டர் பெயரில் விபசார தொழில் நடத்திய பெண் மற்றும் வாடிக்கையாளர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மசாஜ் சென்டரில் சிறுமியை பலாத்காரம் செய்த சென்னையை சேர்ந்த விக்னேஷ்வரன், புதுச்சேரியைச் சேர்ந்த அருண்,  ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.இருவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி,  சிறையில் அடைத்தனர். கைதான இருவரும் தனியார் நிறுவன ஊழியர்கள். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் பலரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர்.