×

மின்வெட்டை பயன்படுத்தி ஐதராபாத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை ! தலைமறைவான குற்றவாளிக்கு போலீஸ் வலை !!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் குடியுருப்பு ஒன்றில் அண்டை வீட்டாரால் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. சந்தனகரில் 10 வயது மைனர் சிறுமியை பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சந்தனநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமுலு கூறுகையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில், மின்வெட்டு காரணமாக 10 வயது சிறுமி தனது வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தார். குற்றவாளி சிறுமியை அழைத்து வீட்டிற்குள் வந்து தூங்குமாறு அழைத்து
 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் குடியுருப்பு ஒன்றில் அண்டை வீட்டாரால் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
சந்தனகரில் 10 வயது மைனர் சிறுமியை பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சந்தனநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமுலு கூறுகையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில், மின்வெட்டு காரணமாக 10 வயது சிறுமி தனது வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தார். குற்றவாளி சிறுமியை அழைத்து வீட்டிற்குள் வந்து தூங்குமாறு அழைத்து சென்றுள்ளார். பின்னர் சிறுமியை வீட்டிற்குள் அடைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் பயந்து போன சிறுமி அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தபோது அந்த சிறுமியை குற்றவாளி தடுத்துள்ளார். அப்போது அந்த சிறுமி தரையில் விழுந்து அவளுடைய தலையில் காயங்கள் ஏற்பட்டன. பின்னர் 10 வயது சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து உறவினரிடம் சொல்லி அழுதுள்ளார். பின்னர் உறவினர் தந்த புகாரில் போலீஸ் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. சுமார் 30 வயதுடைய குற்றம் சாட்டப்பட்ட நபர் தற்போது தலைமறைவாகி விட்டார். அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று எஸ்ஐ கூறினார். தலைமறைவான நபரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.