×

“காதலர் தினம் கொண்டாடிட்டு ,இதை வெட்டிகிட்டியே ..” -குடும்ப பிரச்சினையில் நடந்த விபரீதம்.

காதலர் தினத்தன்று மனைவியை கொன்று விட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற தம்பதிகளை பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தின் வைசாலியின் செக்டர் 5 இல் வசிக்கும் தேவ்ஜீத் என்ற 35 வயதான நபர் பூஜா என்ற 28 வயதான பெண்ணை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் .இந்நிலையில் தேவஜீத் அந்த பகுதியில் உள்ள பெற்றோர் சங்க தலைவராக இருந்தார் .மேலும் அவர் அங்கு அவர் வாங்கிய வீட்டிற்கான
 

காதலர் தினத்தன்று மனைவியை கொன்று விட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற தம்பதிகளை பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தின் வைசாலியின் செக்டர்  5 இல் வசிக்கும் தேவ்ஜீத் என்ற 35 வயதான நபர் பூஜா என்ற 28 வயதான பெண்ணை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் .இந்நிலையில் தேவஜீத் அந்த பகுதியில் உள்ள பெற்றோர் சங்க தலைவராக இருந்தார் .மேலும் அவர் அங்கு அவர் வாங்கிய வீட்டிற்கான கடனை கட்ட தவறிவிட்டார் .அதனால் வங்கி அவரின் வீட்டை பறிமுதல் செய்துள்ளது .

இதற்கிடையே அந்த தேவஜித் கடந்த காதலர் தினத்தன்று அவரின் மனைவி பூஜாவை அழைத்து கொண்டு காதலர் தினத்தை ஒரு ஹொட்டேலில்  சென்று கொண்டாடினார்.அதன் பிறகு  இருவரும் இரவு உணவை முடித்து கொண்டு வீட்டிற்கு திரும்பி வந்தார்கள் .

அதன் பிறகு அன்று இரவு தேவஜீத் அவரின் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்தார் .அதன் பின்னர் தேவஜீத் அங்குள்ள ஒரு காலி மனையில் தன்னுடைய மணிக்கட்டை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்று மயங்கிய நிலையில் கிடந்தார் .மறுநாள் அந்த பகுதி மக்கள் அவரின் நிலையை கண்டு அவரின் மனைவியிடம் கூற சென்ற போது, அங்கு அவரும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ந்தனர் .அதன் பிறகு போலீசார் தேவஜீத்தை சிகிச்சைக்கு ஹாஸ்ப்பிட்டலுக்கு அனுப்பிவைத்து ,அவரின் மனைவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள் .அதன் பிறகு அந்த வீட்டிலிருந்து”தாங்கள்  சொந்த காரணங்களுக்காக இறப்பதாக”   தேவஜீத் எழுதிய தற்கொலை குறிப்பை கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்  .