×

“வயலில் புல் வெட்டுவது போல பாகங்களை வெட்டி தள்ளிட்டியே” -சந்தேகத்தால் வந்த விளைவு.

ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையே வந்த சந்தேகத்தால் அந்த கணவன் தன்னுடைய மனைவியை வயலில் வெட்டி வீசினார் . உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் நிவாரி பகுதியில் ஒரு கணவணும் , மனைவியும் வசித்து வந்தார்கள் .அவர்களுக்கு கல்யாணம் ஆகி 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த கணவர் 36 வயதான மனைவியை சந்தேகப்பட்டுக்கொண்டே இருந்தார் .இதனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது .இந்த சந்தேகத்துக்கு காரணம் பாழாய்ப்போன செல்போன்தான்அவரின் கணவர் வெளியே போயிருக்கும் நேரங்களில் அவர் பலமுறை அவரின்
 

ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையே வந்த சந்தேகத்தால் அந்த கணவன் தன்னுடைய மனைவியை வயலில் வெட்டி வீசினார் .

உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் நிவாரி பகுதியில் ஒரு கணவணும் , மனைவியும் வசித்து வந்தார்கள் .அவர்களுக்கு கல்யாணம் ஆகி 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த கணவர் 36 வயதான மனைவியை சந்தேகப்பட்டுக்கொண்டே இருந்தார் .இதனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது .இந்த சந்தேகத்துக்கு காரணம் பாழாய்ப்போன செல்போன்தான்
அவரின் கணவர் வெளியே போயிருக்கும் நேரங்களில் அவர் பலமுறை அவரின் மனைவியிடம் பேச முயற்சிகும்போதெல்லாம் அவரின் செல்போன் பிஸியாகவே இருந்தது .இதனால் கோபமுற்ற அந்த கணவன் அந்த மனைவியிடம் இது பற்றி கேட்ட போதெல்லாம் தன்னுடைய தோழியோடு பேசுவதாக கூறியுள்ளார் .மேலும் போனை பாஸ் வோர்டு போட்டு லாக் செய்து வைத்துள்ளார் .இதனால் சந்தேகப்பட்ட கணவன் அவரை பலமுறை தாக்கியுள்ளார் .இதன் காரணமாக அந்த மனைவிக்கு கடந்த மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை .அதனால் அந்த கணவன் தன்னுடைய மனைவியை புதன்கிழமை அருகிலுள்ள ஹாஸ்ப்பிட்டலுக்கு அழைத்து செல்வதாக கூறி அங்குள்ள ஒரு வயல் வெளிக்கு அழைத்து சென்றுள்ளார் .அதன் பிறகு அந்த வயல்வெளியில் புல் வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த மனைவியின் உடலின் பல பாகங்களை துண்டு துண்டாக வெட்டி வீசியுள்ளார் .இதன் காரணமாக அந்த மனைவி அங்கேயே உயிரிழந்தார் .பிறகு அந்த கணவன் அங்கிருந்து ஓடிவிட்டார் .
இந்த கொலை விஷயம் இறந்த பெண்ணின் சகோதரனுக்கு தெரிந்து, அவர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த கணவரை வலை வீசி தேடிவருகிறார்கள் .