×

“ஓவரா போன் பேசினது இதுக்குத்தானடி” -ஷாப்பிங் மாலில் காதலனால் காதலிக்கு நேர்ந்த கதி

கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தவர்களின் காதலில் ஏற்பட்ட சந்தேகத்தால், அந்த ஆண் ஒரு பெண்ணை பிளேடால் வெட்டியதால் போலீசார் தேடி வருகிறார்கள் மும்பையின் ஓஷிவாரா பகுதியில் ஒரு 40 வயதான பெண்ணும் ஒரு 36 வயதான ஷாஜிர்கான் என்ற ஆணும் கல்யாணம் செய்து கொள்ளாமல் கணவன் மாணவி போல வாழ்ந்து வந்தார்கள் .பல ஆண்டுகளாக இப்படி வாழ்ந்து வந்த அவர்களின் உறவில் திடீரென விரிசல் ஏற்பட்டது .அதனால் அந்த கானுக்கு அந்த பெண்ணின் மீது சந்தேகம் வந்துள்ளது
 


கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தவர்களின் காதலில் ஏற்பட்ட சந்தேகத்தால், அந்த ஆண் ஒரு பெண்ணை பிளேடால் வெட்டியதால் போலீசார் தேடி வருகிறார்கள்


மும்பையின் ஓஷிவாரா பகுதியில் ஒரு 40 வயதான பெண்ணும் ஒரு 36 வயதான ஷாஜிர்கான் என்ற ஆணும் கல்யாணம் செய்து கொள்ளாமல் கணவன் மாணவி போல வாழ்ந்து வந்தார்கள் .பல ஆண்டுகளாக இப்படி வாழ்ந்து வந்த அவர்களின் உறவில் திடீரென விரிசல் ஏற்பட்டது .அதனால் அந்த கானுக்கு அந்த பெண்ணின் மீது சந்தேகம் வந்துள்ளது .இதற்கு காரணம் அந்த பெண் எந்நேரமும் போனிலேயே பேசிக்கொண்டிருந்ததுதான் .அதனால் அவர் பலமுறை அந்த பெண்ணை கண்டித்துள்ளார் .
ஆனால் அந்த பெண், கானின் பேச்சை கேட்காமல் மீண்டும் மீண்டும் நள்ளிரவில் கூட போனில் பேசிக்கொண்டிருந்தார் .இதனால் அவரின் காதலனுக்கு மேலும் சந்தேகம் வந்ததால் இருவரும் எந்நேரமும் சண்டை போட்டுகொண்டிருந்தார்கள் .
அதன் படி கடந்தவாரம் புதன்கிழமை அந்த பெண் தனியாக அவரின் காதலனை விட்டு விட்டு அங்கிறுக்கும் ஒரு ஷாப்பிங் மாலுக்கு சென்றார் .அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற கான் அந்த ஷாப்பிங் மாலுக்குள்ளேய வைத்து அந்த பெண்ணின் கழுத்தை ப்ளேடு கொண்டு வெட்டினார் .இதனால் அந்த பெண் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் விழுந்தார் .அதன் பின் கான் அங்கிருந்து தப்பியோடி விட்டார் .பிறகு அந்த ஷாப்பிங் மாலில் இருந்த பொது மக்கள் அந்த பெண்ணை மீட்டு அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் சேர்த்தார்கள் .அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது .அதன் பிறகு இந்த தாக்குதல் தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிந்து அந்த பெண்ணை தாக்கிய கானை தேடி வருகின்றனர் .