×

"உன் புருஷன் எனக்கு மட்டும்தான் தான் சொந்தம் "-சீறிய சின்னவீட்டுக்கு நேர்ந்த கொடுமை 

 

தன் மனைவியிடம் சண்டை போட்ட விதவை பெண்ணை அவரோடு கள்ள உறவில் ஈடுபட்ட அந்த கணவர்  கொலை செய்தார் 
ஒடிசாவின் புவனேஸ்வர் பரத்பூர் பகுதியில் வசிக்கும் கார்த்திக் ஜெனா என்ற நபர் புவனேஸ்வரில் மேசனாக வேலை செய்தார் .அவர் அங்குள்ள  நாயகர் பகுதியில் தனது மனைவி மற்றும்  இரண்டு குழந்தைகளோடு  வசித்தார் . இந்நிலையில் பரத்பூரில் வசிக்கும் ஒரு விதவைபெண்  சந்தியாராணி சேத்தி என்ற பெண்ணோடு அவர் கள்ள உறவில் ஈடுபட்டார் .அவர் அந்த பெண்ணுக்கு தான் வேலை பார்க்கும் இடத்திலே ஒரு வேலை வாங்கி கொடுத்து ,இருவரும் ஜாலியாக இருந்தனர் .


பிறகு அந்த பெண்ணுக்கு தனியாக ஒரு வீடு வாடகை எடுத்து அங்கு சின்ன வீடாக அவரை வைத்து கொண்டு அடிக்கடி திருட்டு தனமாக போய் வந்தார் .இந்த விஷயம் அந்த கார்த்திக்கின் மனைவிக்கு தெரிய வந்து குடும்பத்தில் சண்டை வந்தது .அதனால் அவர் இந்த விஷயத்தினை அந்த சின்னவீடு சந்த்யாராணியிடம் சொன்னார் .அப்போது அந்த பெண் அவரின் மனைவியை விட்டு பிரிந்து தன்னை கல்யாணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தினார் .மேலும் அவரின் மனைவிக்கு போன் செய்து அவரின் புருஷன் தனக்குத்தான் சொந்தம் என்று கூறி சத்தம் போட்டார் .
அதை கேட்டு அந்த கார்த்திக் கடும் கோபம் கொண்டு செப்டம்பர் 3 இரவு,  சந்தியாராணியை கழுத்தை நெரித்து கொன்றார். .பின்னர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார் .பிறகு இந்த கொலை பற்றி போலிசுக்கு தகவல் தெரிந்து அந்த பெண்ணை கொன்ற கார்த்திக்கை கைது செய்தனர்  
.