×

“மூத்த மகனிடம் பாசம் ,என்கிட்ட வேஷமா?” -பெற்ற தாயை கொலை செய்த இளைய மகன்..

ஒரு தாய் தன்னை விட மூத்த மகனிடம் பாசமாக இருப்பதாக சந்தேகப்பட்ட இளையகன், அவரை கொலை செய்து வீசிய சம்பவத்தால் அந்த பகுதி தாய்மார்கள் பீதியடைந்துள்ளனர் . மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் சாவித்ரி பாண்டே என்ற பெண்ணுக்கு இரண்டு மகன்கள் .இதில் மூத்தமகன் சமீபத்தில் இறந்து விட்டார் ,இதனால் சாவித்ரி எந்நேரமும் இறந்து போன மூத்தமகனை நினைத்து அழுது கொண்டிருந்தார் .இது அவரின் இளைய மகன்24 வயது திரேந்திராவுக்கு எரிச்சலை உண்டாக்கியது .இதனால் தன்னுடைய தாய்க்கு
 

ஒரு தாய் தன்னை விட மூத்த மகனிடம் பாசமாக இருப்பதாக சந்தேகப்பட்ட இளையகன், அவரை கொலை செய்து வீசிய சம்பவத்தால் அந்த பகுதி தாய்மார்கள் பீதியடைந்துள்ளனர் .
மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் சாவித்ரி பாண்டே என்ற பெண்ணுக்கு இரண்டு மகன்கள் .இதில் மூத்தமகன் சமீபத்தில் இறந்து விட்டார் ,இதனால் சாவித்ரி எந்நேரமும் இறந்து போன மூத்தமகனை நினைத்து அழுது கொண்டிருந்தார் .இது அவரின் இளைய மகன்24 வயது திரேந்திராவுக்கு எரிச்சலை உண்டாக்கியது .இதனால் தன்னுடைய தாய்க்கு தன்னை விட மூத்தமகன் மீதுதான் பாசமென்று நினைத்து வீட்டிலுள்ளவர்களிடம் சண்டை போட்டுக்கொண்டிருந்தார் .அவரின் தாயை வெறுத்து அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார் .
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அவர் தனது 44 வயது தாயை இழுத்துக்கொண்டு ஒரு காட்டு பகுதிக்கு சென்றார் .அங்கு அவர் தன்னுடைய தாய் சாவித்ரியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு உடலை குப்பை தொட்டியில் வீசிவிட்டு சென்று விட்டார் .


சாவித்ரியின் கணவர் தன்னுடைய மனைவியை இரண்டு நாட்களாக காணாததால் போலீசில் புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடியதில் அவரின் மனைவி சாவித்ரியின் உடல், கொலை செய்யப்பட்டு குப்பைத்தொட்டியில் இருப்பதை கண்டறிந்தனர் .பிறகு இந்த கொலை விஷயமாக விசாரணை நடத்தியதில் அவரின் இளைய மகன் திரேந்திராதான் தன்னுடைய தாயை கொலை செய்து வீசியுள்ளது கண்டு ,அவரை கைது செய்து சிறையிலடைத்தனர் .மேலும் அவர் தன்னுடைய தாயை கொலை செய்வதை வீடியோவும் எடுத்து வைத்துள்ளார் ,அதையும் போலீசார் கைப்பற்றி  வெளியிட்டனர் .