×

“நான் போரடிச்சிட்டேன்னு புதுசா ஒருத்தன புடிச்சிட்டியா” சரக்கடித்த பின்னர் காதலியை சாகடித்த கள்ளக்காதலன்.

கள்ள காதலில் ஈடுபட்ட பெண் மீது வந்த சந்தேகத்தால் அந்த பெண்ணை அவரின் கள்ள காதலனே தீர்த்து கட்டிய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது . தெலுங்கானாவின் யாதத்ரி புவனகிரி மாவட்டத்தில் ஒரு 37 வயது பெண் ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள நந்தி நகரில் தனியார் பாதுகாப்பு காவலராக பணிபுரிந்தார்.அந்தப் பெண்ணின் கணவர் 18 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.அவருக்கு இப்போது 22 வயதில் ஒரு மகள் இருக்கிறார் .இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு
 

கள்ள காதலில் ஈடுபட்ட பெண் மீது வந்த சந்தேகத்தால் அந்த பெண்ணை அவரின் கள்ள காதலனே தீர்த்து கட்டிய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது .

தெலுங்கானாவின் யாதத்ரி புவனகிரி மாவட்டத்தில் ஒரு 37 வயது பெண் ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள நந்தி நகரில் தனியார் பாதுகாப்பு காவலராக பணிபுரிந்தார்.அந்தப் பெண்ணின் கணவர் 18 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.அவருக்கு இப்போது 22 வயதில் ஒரு மகள் இருக்கிறார் .
இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு குமார் என்ற ஒரு டாக்சி டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டது .இருவரும் கள்ள காதலில் ஏற்பட்டு பழகிய விவரம் அந்த ஊர் மக்களுக்கும் அவரின் மகளுக்கும் தெரியும் .இப்போது அந்த குமாருக்கு அந்த பெண் மீது சந்தேகம் வந்துள்ளது .அவர் தன்னை விடுத்து வேறு ஒருவரை காதலிக்கிறார் என சந்தேகப்பட்டு அடிக்கடி அவரை டார்ச்சர் செய்துள்ளார் .மேலும் கடந்த இரண்டு மாதங்களாக இருவருக்கு இந்த விஷயம் தொடர்பாக அடிக்கடி சண்டை நடந்துள்ளது .
இதற்கிடையே இரண்டு நாட்களுக்கு முன்பு, அவர் வாரங்கல் மாவட்டத்தில் ஜங்காவோனின் தேவர்புலா மண்டலத்தில் உள்ள தனது சொந்த கிராமமான தர்மகத தண்டாவுக்குச் சென்றார்.அப்போது அங்கு வந்த குமார் அந்த பெண்ணை கூப்பிட்டுக்கொண்டு சரக்கு பாட்டில் வாங்கிக்கொண்டு சமாதானம் பேசுவது போல ஒரு ஒதுக்கு புறமான இடத்திற்கு அழைத்து சென்றார் .பின்னர் அங்கு உட்கார்ந்து சரக்கடித்து விட்டு அவரின் கழுத்தை வெட்டி கொலை செய்தார் .பின்னர் சடலத்தினை அங்கேயே வீசி விட்டு ஓடி விட்டார் .
இரண்டு நாட்களாக தன்னுடைய தாயாரை காணாத அவரின் மகள் பொலிஸில் புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து ,காதலன் குமாரை கைது செய்தார்கள் .