×

“கரண்ட் பில் கட்டு ,இல்லேன்னா கழுத்தை வெட்டு”-தந்தைக்கு மகன் செஞ்ச உதவிய பார்த்திங்களா …

கரெண்ட் பில் கட்டாமல் இருந்த தந்தையால் கோபமடைந்த அவரின் மகன் தந்தையை கழுத்தை அறுத்து கொன்ற விஷயம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது புதுடெல்லியில் ரன்ஹோலா பகுதியில் சவுகான் என்று 25 வயது வாலிபர் தன்னுடைய 52 வயது தந்தைரமேஷுடன் அடிக்கடி சண்டையிடுவாராம் . அவரின் தாய் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்த பிறகு இருவருக்கும் சொத்து விஷயமாகவும் ,குடும்ப பிரச்சினையாலும் தினமும் சண்டை வருமாம் .மேலும் அவர்கள் மூன்று மாடி கட்டிடத்தை வாடகைக்கு விட்டுள்ளார்கள்
 

கரெண்ட் பில் கட்டாமல் இருந்த தந்தையால் கோபமடைந்த அவரின் மகன் தந்தையை கழுத்தை அறுத்து கொன்ற விஷயம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது


புதுடெல்லியில் ரன்ஹோலா பகுதியில் சவுகான் என்று 25 வயது வாலிபர் தன்னுடைய 52 வயது தந்தை
ரமேஷுடன் அடிக்கடி சண்டையிடுவாராம் . அவரின் தாய் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்த பிறகு இருவருக்கும் சொத்து விஷயமாகவும் ,குடும்ப பிரச்சினையாலும் தினமும் சண்டை வருமாம் .மேலும் அவர்கள் மூன்று மாடி கட்டிடத்தை வாடகைக்கு விட்டுள்ளார்கள் ,அந்த வாடகை பணத்தையும் அவரின் மகன் அப்பாவிடம் கேட்டு சண்டையிடுவாராம் .
சமீபத்தில் அவர்களின் கட்டிடத்திற்கு கரெண்ட் பில் காட்டாமல் இருந்துள்ளதால் அதிகாரிகள் கனெக்ஷனை கட் பண்ணி விட்டார்கள் .இதனால் அந்த பணத்தையார் கட்டுவது சென்று இருவருக்குள்ளும் நடந்த சன்டையில் மகன் சௌகான் அவரின் தந்தை ரமேஷை கத்தியால் கழூத்தை அறுத்து கொலை செய்துள்ளார் .இந்த கொலை பற்றி தகவல் கிடைத்த போலீசார் விரைந்து வந்து தந்தையை கொன்ற மகனை கைது செய்து விசாரித்தபோது அவர் மூலம் அவரின் தந்தை பற்றி பல உண்மையாகள் கிடைத்தது. .அவரின் தந்தை அவரின் தாயரிடம் இப்படி தினமும் சண்டை போட்டதால் அவரின் தாயார் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகி இறந்தாராம் .அதே போல தன்னிடமும் சண்டை போட்டதாகவும் ,பணமேதும் கொடுக்காமல் தன்னை டார்ச்சர் செய்ததால் தான் அவரை கொன்றதாக சவுக்கான் வாக்குமூலம் கொடுத்தார் .ஒரு நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்த அவரின் தந்தை அவரின் தாயார் இறந்ததும் வேலையை விட்டு விட்டு தனியாக வசித்து வந்துள்ளார் .