×

"ஆபீஸ்லேயே அதுக்கு கூப்பிடுறிங்களே சார்" -ஒரு  அதிகாரியிடம் சிக்கிய பெண் ஊழியர்  

 


 

பெண் ஊழியர் ஒருவருக்கு உயர்மட்ட அதிகாரி ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவில் அம்மாநில தலைமைச் செயலகம் அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தில் உள்ள ஒரு பிரிவில் இச்சாராம் என்ற ஒரு அதிகாரி வேலை பார்த்து வருகிறார் .அந்த அதிகாரியிடம் ஒரு 30 வயதான பெண் ஊழியர் ஒருவர் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார் .அந்தப்பெண் மீது அந்த அதிகாரிக்கு ஒரு கண் .அதனால் அந்த பெண்ணிடம் அடிக்கடி அவர் பாலியல் சில்மிஷம் செய்து வந்தார் .அதனால் அந்த பெண் அவரால் மிகவும் பாதிக்கப்பட்டார் .அதனால் அவரை சிக்க வைக்க அந்த பெண்  திட்டமிட்டார் 
அதனால் சில நாட்களுக்கு முன் அங்கு  பணிக்கு வந்த அந்த பெண்ணிடம், அந்த அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்து அவரை பாத்ரூமுக்குள் உல்லாசத்துக்கு வர சொல்லி டார்ச்சர் செய்தார் .இதை அந்த பெண் ரகசியமாக செல்போன் கேமராவில் படம் பிடித்து சமூக ஊடகத்தில் வெளியிட்டுவிட்டார் 
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த அதிகாரி இச்சாராமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.