×

“பண நஷ்டத்தால் வந்த மனக்கஷ்டம்” – பார்ட்னரை குடும்பத்தோடு காரில் வைத்து கொளுத்திய நண்பர்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வேணுகோபால் ரெட்டி என்பவரும் கங்காதரன் என்பவரும் கார் பிஸ்னஸ் செய்து வந்தார்கள் .அப்போது இருவருக்கும் அந்த வியாபாரத்தில் பண விஷயத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாகவும் ,வியாபரம் சரியாக நடக்காததாலும் இருவரும் பிரிந்து விட்டார்கள் . இந்நிலையில் வேணுகோபாலுக்கு கங்காதரன் மீது பண விஷயத்தில் கடுங்கோபமாக இருந்துள்ளார்,இதனால் அவர் பலமுறை கங்காதரனை நேரில் சந்தித்து பேச முயன்றுள்ளார் .ஆனால் அதற்கு கங்காதரன் அவருக்கு டிமிக்கி கொடுத்து வந்துள்ளார் . திங்கள் கிழமையன்று ஓர் மீடியேட்டர்
 

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வேணுகோபால் ரெட்டி என்பவரும் கங்காதரன் என்பவரும் கார் பிஸ்னஸ் செய்து வந்தார்கள் .அப்போது இருவருக்கும் அந்த வியாபாரத்தில் பண விஷயத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாகவும் ,வியாபரம் சரியாக நடக்காததாலும் இருவரும் பிரிந்து விட்டார்கள் .
இந்நிலையில் வேணுகோபாலுக்கு கங்காதரன் மீது பண விஷயத்தில் கடுங்கோபமாக இருந்துள்ளார்,இதனால் அவர் பலமுறை கங்காதரனை நேரில் சந்தித்து பேச முயன்றுள்ளார் .ஆனால் அதற்கு கங்காதரன் அவருக்கு டிமிக்கி கொடுத்து வந்துள்ளார் .


திங்கள் கிழமையன்று ஓர் மீடியேட்டர் மூலமாக கங்காதரன் அவருடைய மனைவியோடு வேணுகோபாலை ஒரு காரில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு நால்வரும் காரில் போய்க்கொண்டிருந்த போது வேணுகோபால் திடீரென காரை நிறுத்திவிட்டு ஓரிடத்தில் தம் அடிக்க இறங்கிவிட்டார் .பிறகு அவர் அந்த மூவரையும் காருக்குள் வைத்து பூட்டி ,விஸ்கியை கார் மீது ஊற்றி தீவைத்து கொளுத்தியுள்ளார் . இதில் மூவரும் தீயில் எரிந்து கொண்டிருந்த போது வேணுகோபால் அங்கிருந்து தப்பியோடி விட்டார் .பிறகு போலீசுக்கு தகவல் தெரிந்து அங்கு விரைந்து வந்து, காருக்குள் தீயில் எரியும் மூவரையும் பலத்த தீக்காயத்துடன் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு ஒருவர் ஆபத்தான நிலையிலும் மற்றவர்கள் லேசான தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள் .பிறகு போலீசார் வேணுகோபாலை பிடித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள் .