×

“உன்னையும் உன் தங்கையையும் தனித்தனியா வச்சிக்கிறேன்” -மனைவியிடம் டீலிங் பேசிய கணவன் -அடுத்து நடந்த கொடுமை

மனைவியோடு சேர்ந்து மைத்துனியை கொலை செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். குஜராத்தின் ஆமதாபாத்தின் சோலா பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஹிதேந்திர படேல் மற்றும் அவரது 45 வயதான மனைவி புனிதா ஆகியோர் வசித்து வந்தனர் .இந்நிலையில் அந்த மனைவியின் தங்கை கோமல் தன்னுடைய கணவனை விட்டு பிரிந்து குழந்தையோடு தனியே வசித்து வந்தார் .அதனால் அந்த பெண்ணுக்கு அந்த கணவன் படேல் வலை வீசினார் .அவர் வீசிய வலையில் அந்த மைத்துனி கோமல் விழுந்தார்
 

மனைவியோடு சேர்ந்து மைத்துனியை கொலை செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.


குஜராத்தின் ஆமதாபாத்தின் சோலா பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஹிதேந்திர படேல் மற்றும் அவரது 45 வயதான மனைவி புனிதா ஆகியோர் வசித்து வந்தனர் .இந்நிலையில் அந்த மனைவியின் தங்கை கோமல் தன்னுடைய கணவனை விட்டு பிரிந்து குழந்தையோடு தனியே வசித்து வந்தார் .அதனால் அந்த பெண்ணுக்கு அந்த கணவன் படேல் வலை வீசினார் .அவர் வீசிய வலையில் அந்த மைத்துனி கோமல் விழுந்தார் .பின்னர் அந்த படேல் தன்னுடைய மனைவிக்கு தெரியாமல் அந்த கோமலுடன் ஓடி விட்டார் .அதன் பிறகு அந்த பெண்ணோடு தனி குடித்தனம் இருந்தார் .
பின்னர் ஆறு மாதஙக்ளுக்கு பிறகு பட்டேல் தன்னுடைய மனைவி புனிதாவை சந்தித்தார் .அப்போது அவர் தன் மனைவியிடம் இருவரையும் தனித்தனி வீட்டில் குடிவைத்து இருவரோடும் வாழ்கிறேன் என்று டீலிங் பேசினார் . அதற்கு அந்த மனைவி சம்மதம் தெரிவித்ததும் ,இருவரோடும் படேல் வசித்தார் .பின்னர் அவர்க்கும் கோமலுக்கும் தகராறு ஏற்பட்டது .அதன் பிறகு அந்த மனைவி புனித்தோடு சேர்ந்து அவர் மைத்துனி கோமளை மயங்க செய்து கொலை செய்து விட்டனர் .அதன் பிறகு அவரின் உடலை அங்குள்ள ஒரு ஆற்றில் வீசிவிட்டனர் .பிறகு போலீசுக்கு தகவல் தெரிந்து அவரின் பிரேதத்தை கைப்பற்றி அந்த பெண்ணை கொன்ற படேல் மற்றும் அவரின் மனைவியை கைது செய்தனர் .