×

"கரு உருவானது தெரியாமலே பள்ளிக்கு சென்று .." மாணவிக்கு பைக்கில்  நடந்த பயங்கரம் 

 


பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீஸ் தேடி வருகிறது 


தமிழகத்தின் சென்னையின் அருகேயுள்ள அம்பத்தூர் பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதியின்  16 வயது  மகள்  முகப்பேரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார் .
அவர்  திண்டிவனத்தை சேர்ந்த 20 வயதான  சஞ்சய்  என்பவருடன், கடந்த 6 மாதத்துக்கு முன்  இன்ஸ்டாகிராம் மூலம்  பழகி வந்தார் . அதன் பின்னர் அவர்களின் நட்பு காதலாக மாறியதும் ,அந்த காதலன் அந்த காதலியை சந்திக்க சில மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு பைக்கில் வந்தார் .அப்போது அந்த காதலியை அவர் சந்திக்க விரும்புவதாக கூறியதும் ,அந்த மாணவி வீட்டில் பொய் சொல்லிவிட்டு அந்த வாலிபருடன் பைக்கில் ஊர் சுற்ற போய் விட்டார் .அன்று ஒரு நாள் முழுவதும் அந்த காதலனோடு சென்னை முழுவதும் பைக்கில் ஜாலியாக சுற்றிவிட்டு இரவில் வீட்டுக்கு வந்தார் .
அதன் பிறகு அந்த பெண் வழக்கம்போல பள்ளிக்கூடத்திற்கு கடந்த சில மாதங்களாக சென்று வந்துள்ளார் .இந்நிலையில் அந்த மாணவிக்கு திடீரென்று வயிற்று வலி வந்ததும் அவரின் பெற்றோர் அந்த மகளை டாக்டரிடம் கூட்டி சென்றனர் .அப்போது அந்த மாணவியை பரிசோதனை செய்த டாகடர் அவர் கர்ப்பமாக இருப்பதை கண்டு அவரின் பெற்றோரிடம் கூறினர் .அதை கேட்டு அதிர்ச்சியான அவரின் பெற்றோர் அந்த பெண்ணிடம் விசாரித்த போது ,சஞ்சய் என்பவரின் உறவினை  பற்றி கூறினார் .உடனே அவர்கள் அந்த சஞ்சய் மீது போலீசில் புகார் கூறியதும் ,போலீசார் அந்த சஞ்சயை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.