×

“இரவு டூட்டிக்கு போனவரின் மனைவியோடு உறவு” -கூட வேலை செய்தவரே செஞ்ச ஏடாகூடமான வேலை

மன நலம் பாதிக்கப்பட்ட நண்பரின் மனைவியை வீட்டில் பலாத்காரம் செய்த ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தார்கள் . புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் ஒரே தொழிற்சாலையில் இரு நண்பர்கள் வேலை பார்த்து வந்தார்கள் .அவர்கள் ஒன்றாகவே வேலைக்கு போவார்கள் ,ஒன்றாகவே அலுவலகத்தில் சாப்பிடுவார்கள் .இதில் ஒரு நண்பரின் மனைவிக்கு கொஞ்சம் மன நல பாதிப்பு இருந்துள்ளது .அதனால் அவரின் மீது அவரின் கணவரின் நண்பருக்கு ஆசை வந்துள்ளது .இதனால் அந்த பெண்ணை அடைய சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி
 

மன நலம் பாதிக்கப்பட்ட நண்பரின் மனைவியை வீட்டில் பலாத்காரம் செய்த ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தார்கள் .


புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் ஒரே தொழிற்சாலையில் இரு நண்பர்கள் வேலை பார்த்து வந்தார்கள் .அவர்கள் ஒன்றாகவே வேலைக்கு போவார்கள் ,ஒன்றாகவே அலுவலகத்தில் சாப்பிடுவார்கள் .இதில் ஒரு நண்பரின் மனைவிக்கு கொஞ்சம் மன நல பாதிப்பு இருந்துள்ளது .அதனால் அவரின் மீது அவரின் கணவரின் நண்பருக்கு ஆசை வந்துள்ளது .இதனால் அந்த பெண்ணை அடைய சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தார் .
அக்டோபர் 26ம் தேதி இரவு டூட்டிக்கு இருவரும் தொழிற்ச்சாலைக்கு போயுள்ளனர் .அப்போது அவர் தன்னுடைய நண்பர் தூங்கியதும் ,அவரின் செல்போனை எடுத்துக்கொண்டு நேராக அவரின் வீட்டிற்கு சென்றார் .பின்னர் நண்பரின்போனிலிருந்து அவரின் மனைவிக்கு போன் செய்து கதவு திறக்க சொன்னார் .தன்னுடைய கனவர்தான் வந்திருக்கிறார் என்றெண்ணிய அந்த பெண் கதவை திறந்தார் .அப்போது அங்கு நின்ற அவர் அந்த பெண்ணை வீட்டிற்குள் தள்ளி பாலியல் பலாத்காரம் செய்தார் .பின்னர் இந்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டி விட்டு சென்றுள்ளார் .
ஆனால் அந்த பெண் மறுநாள் தன்னுடைய கணவரிடம் இந்த விஷயத்தை கூறியதும் அவர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தார் .போலீசார் நவம்பர் 2 ம் தேதி வழக்கு பதிவு செய்து அந்த நபரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்