×

“உன்னை கொடுத்தால் வேலை கொடுப்பேன்” -இன்டர்வ்யூ போன பெண்ணுக்கு நடந்த கொடுமை

ஒரு பெண் வேலை தேடி, ஒரு நிறுவனத்தில் நடந்த இன்டர்வ்யூவுக்கு போன போது அங்கு இன்டர்வ்யூ நடத்தியவரால் பலத்காரத்துக்குள்ளான சம்பவம் பலருக்கு அதிர்ச்சியளித்துள்ளது. தென் டெல்லியின் ஷாஹீன் பாக் நகரில் காசியாபாத்தை சேர்ந்த ஒரு 24 வயது பெண் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார் .அவர் அந்த வேலையை விட அடிக்க சம்பளமுள்ள ஒரு சிறந்த வேலையினை தேடி வந்துள்ளார்.அதனால் அவர் வேலைவாய்ப்பு செய்திகளை இணைய தளங்கள் மற்றும் செய்தி தாள்களில் தேடி வந்துள்ளார் .அப்போது ஒரு
 

ஒரு பெண் வேலை தேடி, ஒரு நிறுவனத்தில் நடந்த இன்டர்வ்யூவுக்கு போன போது அங்கு இன்டர்வ்யூ நடத்தியவரால் பலத்காரத்துக்குள்ளான சம்பவம் பலருக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

தென் டெல்லியின் ஷாஹீன் பாக் நகரில் காசியாபாத்தை சேர்ந்த ஒரு 24 வயது பெண் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார் .அவர் அந்த வேலையை விட அடிக்க சம்பளமுள்ள ஒரு சிறந்த வேலையினை தேடி வந்துள்ளார்.அதனால் அவர் வேலைவாய்ப்பு செய்திகளை இணைய தளங்கள் மற்றும் செய்தி தாள்களில் தேடி வந்துள்ளார் .அப்போது ஒரு நபர் ஒரு தன்னுடைய நிறுவனத்திற்கு ஆட்கள் தேவையென்று விளம்பரம் கொடுத்துள்ளதையும், அவர் நேர்முக தேர்வுக்கு வரசொல்லி ஒரு விலாசத்தையும் தேதியையும் குறிப்பிட்டுள்ளதையம் அந்த பெண் ஒரு வாட்ஸ் அப் குழுவில் பார்த்தார் .சமீபத்தில்தான் அவரும் அந்த வாட்ஸ்அப் குழுவில் சேர்ந்தார்.
இதனால் அவர் அந்த வேலையின் நேர்முக தேர்வுக்கு சென்ற போது, அங்கு ஒரு வாலிபர் அந்த பெண்ணை இன்டர்வ்யூ செய்யும் சாக்கில் அந்த அலுவலகத்திலேயே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண், அங்கிருந்தது தப்பி வந்து அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார் .அந்த பெண்ணின் புகாரை பெற்ற போலீசார், அந்த வாலிபரை கைது செய்து விசாரித்த போது , இவரைப்பற்றி பல திடுக்கிடும் உணமைகள் வெளிவந்தன . இந்த ஊரடங்கு நேரத்தில் ஒரு நிதி நிறுவனத்தில் வேலை செய்த அவருக்கு வேலை பறிபோனதால், அவர் இப்படி மோசடியாக விளம்பரம் கொடுத்து வேலை தேடி வரும் பெண்களை பலாத்காரமும், ஆண்களிடம் பணமும் பறித்த விவகாரம் போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது .அதனால் போலீசார் அவர் மீது பலாத்காரம் மற்றும் மோசடி வழக்குகளை பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.