×

"மருமகளை பார்த்ததும் ஏன்யா மிருகமாயிட்டே?" -ஒரு மாமானாரின் பலான லீலைகள் 

 

பிளஸ் 2 படிக்கும் தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டு ,அந்த மருமகளை மாமனார் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள குணா மாவட்டத்தில் உள்ள மியானா பகுதியில் வசிக்கும் ஒரு நபர் தன்னுடைய ப்ளஸ் டூ படிக்கும் மகனுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து பெண் பார்த்து வந்தார் . 
அதனால் அவர் ராஜஸ்தானை சேர்ந்த ஒரு  21 வயது பெண்ணை பார்த்து தன் மகனுக்கு மணமுடித்து வைத்தார் .அதன் பிறகு அந்த 16 வயதான மாணவன் வழக்கம் போல் ஸ்கூலுக்கு படிக்கச் சென்று விட்டார் .அதன் பிறகு தான் அந்த  மாமனாரின் உள்நோக்கம் தெரிய வந்தது .
அந்த முதியவரின் மகன் ஸ்கூலுக்கு சென்றதும் அந்த மாமனார் புதிதாக கல்யாணமாகி வந்த தன்னுடைய 21 வயதான மருமகளை ஆயுதங்களை காமித்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் ,இது பற்றி ஸ்கூலுக்கு போய் விட்டு வந்த தனது கணவரிடம் கூறினார் .அதன் பிறகு இருவரும் சேர்ந்து அங்குள்ள காவல் நிலையத்தில் சென்று அந்த மாமனார் மீது புகார் கொடுத்தனர் .அவர்களின் புகாரில், அந்த மாமனார் தங்களின் குடும்பத்திலிருக்கும் பல பெண்களை மிரட்டி அவர்களின் கற்ப்பை சூரையாடியுள்ளதாகவும் ,மேலும் அவ்ர்களையெல்லாம் பல ஆயுதங்களை காமித்து கொலை செய்து விடுவதாக மிராட்டுவதாகவும்  புகார் கூறியுள்ளனர் .இதனால் போலீசார் அந்த மாமனார் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்