×

“தம்பி பிரிவை தாங்க முடியலையே” -அண்ணன் அரங்கேற்றிய நாடகத்தை பாருங்க

சொத்து தகராறில் தம்பியை கொன்றுவிட்டு ,நோயால் இறந்ததாக நாடகமாடிய அண்ணனை போலீசார் கைது செய்துள்ளார்கள் டெல்லியில் சுரேந்தர் என்பவர் தன்னுடைய சகோதரர் குடும்பத்தினரோடு கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளார் .இந்நிலையில் சுரேந்தரின் அண்ணனுக்கு தன்னுடைய தம்பியால் பல் இன்னல்கள் ஏற்பட்டுள்ளன .மேலும் தம்பியின் சொத்துக்கள் முழுவதையும் அபகரிக்க ஆசைப்பட்ட அண்ணன் அவரை கொலை செய்ய திட்டமிட்டார் .அவரை நேரடியாக கொலை செய்தால் மாட்டிகொள்வோமென்று கருதி அதற்காக தன்னுடைய நண்பர்களோடு ஆலோசனை நடத்தினார் . அதன்படி கடந்த வாரம்
 

சொத்து தகராறில் தம்பியை கொன்றுவிட்டு ,நோயால் இறந்ததாக நாடகமாடிய அண்ணனை போலீசார் கைது செய்துள்ளார்கள்

டெல்லியில் சுரேந்தர் என்பவர் தன்னுடைய சகோதரர் குடும்பத்தினரோடு கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளார் .இந்நிலையில் சுரேந்தரின் அண்ணனுக்கு தன்னுடைய தம்பியால் பல் இன்னல்கள் ஏற்பட்டுள்ளன .மேலும் தம்பியின் சொத்துக்கள் முழுவதையும் அபகரிக்க ஆசைப்பட்ட அண்ணன் அவரை கொலை செய்ய திட்டமிட்டார் .அவரை நேரடியாக கொலை செய்தால் மாட்டிகொள்வோமென்று கருதி அதற்காக தன்னுடைய நண்பர்களோடு ஆலோசனை நடத்தினார் .


அதன்படி கடந்த வாரம் தன்னுடைய தம்பி தூங்கும்போது தலையில் அடித்து காயப்படுத்தி விட்டார் .பிறகு அவர் தன்னுடைய தம்பியை சிகிச்சைக்கு அங்குள்ள மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றார் .அப்போது சுரேந்திதரின் குடும்பத்தினர் மருத்துவமனையில் இவருக்கு ஈரல் கெட்டுப்போய் விட்டதாகவும் அதனால் அடிக்கடி மயக்கமடைந்து விடுவதாகவும் கூறி மருத்துவமனையில் சேர்த்தனர் .அப்போது சுரேந்தரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் தலையில் கடுமையாக தாக்கப்பட்டதால் உண்டான காயத்தால் ஏற்கனவே இறந்து விட்டதை கண்டுபிடித்தனர் .மேலும் அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் டெஸ்டில் அவருக்கு எந்தவிதமான ஈரல் நோயும் இல்லையென்று கண்டரியப்பட்டது .மேலும் அவரை கொலை செய்து விட்டு குடும்பத்தினர் பொய் சொல்வதை கண்டறிந்த டாக்டர்கள் போலீசில் புகாரளித்தனர் .போலீசார் விரைந்து வந்து சுரேந்தரின் உடலினை பரிசோதனை சோதனை செய்தபோது அவரை கொலை செய்ததை கண்டுபிடித்தனர் .பிறகு தம்பியை கொன்றுவிட்டு நோயால் இறந்ததாக நாடகமாடிய அவரின் சகோதரரை கைது செய்தனர் .