×

"கழுத்தை நெரித்து,முகத்தை  சிதைத்து ..."காதலால் ஒரு பெண்ணுக்கு  நேர்ந்த நிலை. 

 

காதலுக்கு தடையாயிருந்த பெண்ணின்  2 வயது மகளை  கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் ராய்காட்டை சேர்ந்தவர் 20 வயதான சந்தோஷ் அங்குள்ள ஒரு கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் அவ்ரின் உறவுக்கார பெண்ணை காதலித்து வந்து உள்ளார். இந்த காதலுக்கு அந்த காதலியின் பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த ருத்ரா என்ற பெண் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அதனால் அந்த சந்தோஷ் அந்த பெண் மீது மிக கோபத்திலிருந்தார் .அதானல் அந்த பெண்ணை பழி வாங்க சரியான சந்தர்ப்பத்தை  எதிர்நோக்கி காத்திருந்தார் .அதனால்  கடந்த 26-ந் தேதி வெளியே விளையாடிக்கொண்டிருநந்த ருத்ராவின் 2 வயது மகளை அந்தத் சந்தோஷ் கடத்தி சென்று விட்டார் 
பிறகு அந்த  சிறுமியின் பெற்றோர் மகளை காணாததால் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி, சந்தோசுடன் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்தோசை வலைவீசி தேடினர்.
அப்போது  அவர் கடத்திய சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்து, தலையை கல்லால் சிதைத்து ரோகா- முர்டு சாலையில் போட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து சந்தோசை கைது செய்த போலீசார், சிறுமியின் உடலையும் மீட்டனர்.