×

கவர்ந்த கள்ளகாதலியின் மகள் -மிளகாய் பொடியோடு வந்த காதலன் -அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

கள்ளகாதலியின் மகளை பாலியல் கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் ஒரு 40 வயதான பெண் தன்னுடைய கணவர் மற்றும் 20 வயதான மகள் மற்றும் 18 வயதான மகளோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண்ணுக்கும் அவரின் கணவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது .அதனால் அந்த பெண் தன்னுடைய இரண்டு மகள்களை அழைத்து கொண்டு வேறோரு நபருடன் வசித்து வந்தார் . அந்த தாயின் காதலனுக்கு அவரின் 20 வயதான
 


கள்ளகாதலியின் மகளை பாலியல் கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்
மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் ஒரு 40 வயதான பெண் தன்னுடைய கணவர் மற்றும் 20 வயதான மகள் மற்றும் 18 வயதான மகளோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண்ணுக்கும் அவரின் கணவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது .அதனால் அந்த பெண் தன்னுடைய இரண்டு மகள்களை அழைத்து கொண்டு வேறோரு நபருடன் வசித்து வந்தார் .


அந்த தாயின் காதலனுக்கு அவரின் 20 வயதான மகள் மீது ஆசை பிறந்தது .அதனால் அவர் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பிற்பகல், அந்த டீனேஜ் பெண்னின் தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டினுள் வந்தார் .அப்போது அவர் மிளகாய் பொடி கலந்த ஒரு தண்ணீரை அந்த 20 வயதான மகளின் கண்ணில் ஊற்றினார் .பிறகு அந்த பெண் வலியால் துடித்து கொண்டிருந்த போது அவரை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு ஓடி விட்டார் .அதன் பிறகு அந்த பெண் இந்த விஷயத்தினை வெளியே போய் விட்டு வீட்டினுள் வந்த அவரின் தாயிடம் கூறினார் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த தாய் தன்னுடைய மகளை அழைத்துக்கொண்டு அங்குள்ள காவல் நிலையம் சென்றார் .அதன் பிறகு தன்னுடைய காதலன் மீது அவர் பாலியல் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர் .