×

“ஆறு பேர் கெடுத்தான் ,அதுல ஒருத்தன் வாழ்க்கை கொடுத்தான்” -பலாத்கார பெண்ணுக்கு நடந்த திருமணம்

ஒரு பெண்ணை ஆறு பேர் சேர்ந்து கெடுத்துவிட்டு ,வழக்கிலிருந்து தப்பிக்க அதிலொருவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது உத்திரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் அம்ரோஹாவில் உள்ள டிடவுலியில் ஒரு 20 வயதான பெண் தன்னுடைய வீட்டிற்கு பக்கத்து வீட்டு இளைஞரான முஜீப் அகமதுவை காதலித்தார் .அதனால் அந்த தன்னுடைய காதலியை கடந்த அக்டொபர் 21ம் தேதியன்று அந்த காதலன் ஒருகாரில் ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்து சென்றார் . அந்த காரில் முஜீப் அகமது
 

ஒரு பெண்ணை ஆறு பேர் சேர்ந்து கெடுத்துவிட்டு ,வழக்கிலிருந்து தப்பிக்க அதிலொருவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது

உத்திரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் அம்ரோஹாவில் உள்ள டிடவுலியில் ஒரு 20 வயதான பெண் தன்னுடைய வீட்டிற்கு பக்கத்து வீட்டு இளைஞரான முஜீப் அகமதுவை காதலித்தார் .அதனால் அந்த தன்னுடைய காதலியை கடந்த அக்டொபர் 21ம் தேதியன்று அந்த காதலன் ஒருகாரில் ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்து சென்றார் .

அந்த காரில் முஜீப் அகமது மற்றும் அவரது நண்பர்கள் ஜாக்கி பாஷா, வசீம், அனஸ் பாஷா, ஜாம்ஷெட் மற்றும் ஹசீப் ஆகியோர் இருந்தார்கள் ,அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொன்டு அந்த பெண்ணை காரிலேயே கூட்டு பலாத்காரம் செய்தார்கள் .பின்னர் அதை வீடியோவும் எடுத்துள்ளர்கள் .பின்னர், அவர்கள் அவளை சாலையில் தூக்கி எறிந்தனர்.மேலும்  இந்த சம்பவம் குறித்து யாருக்காவது  தகவல் தெரிவித்தால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று மிரட்டினர்.அதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் அவர்கள் மீது போலீசில் பஹாரளித்துள்ளார் .இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் திடீரென அந்த பெண்ணை கெடுத்த அந்த ஆறுபேரில் ஒருவர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார் .அந்த திருமணம் சமூக ஊடகத்தில் வைரலானது .இந்த திருமண வீடியோவை பார்த்த  போலீசார் அதிர்ச்சியடைந்தார்கள் .அதனால் அந்த பெண்ணையும் அவரை  கெடுத்தவர்களையும் மற்றும் அவரை திருமணம் செய்து கொண்டவரையும் போலீசார் வரவைத்து விசாரிக்கிறார்கள் .அவர்களுக்கு எதிராக  தொடர்புடைய பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.