×

“பொண்டாட்டி பிரிந்து போயிட்டாளே” -கோபத்தில் பொது இடத்தில ஒரு புருஷன் பண்ண வேலை

மனைவி பிரிந்து சென்றதால், குழந்தையை வளர்க்க முடியாத ஒரு தந்தை அந்த குழந்தையை அனாதையாக விட்டு சென்றதால் கைது செய்யபட்டார் . மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தின் கல்யாண் நகரில் வசிக்கும் 30வயதான கலீல் ஷேக் என்பவருக்கு திருமணமாகி இரண்டு மாத குழந்தை உள்ளது .இந்நிலையில் அவருக்கும் அவரின் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது .அதன் காரணமாக அவர் மனைவி ,அவரின் கணவர் கலீல் ஷேக்கை விட்டு பிரிந்து சென்று விட்டார் .அதனால் அந்த இரண்டு மாத
 

மனைவி பிரிந்து சென்றதால், குழந்தையை வளர்க்க முடியாத ஒரு தந்தை அந்த குழந்தையை அனாதையாக விட்டு சென்றதால் கைது செய்யபட்டார் .

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தின் கல்யாண் நகரில் வசிக்கும் 30வயதான கலீல் ஷேக் என்பவருக்கு திருமணமாகி இரண்டு மாத குழந்தை உள்ளது .இந்நிலையில் அவருக்கும் அவரின் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது .அதன் காரணமாக அவர் மனைவி ,அவரின் கணவர் கலீல் ஷேக்கை விட்டு பிரிந்து சென்று விட்டார் .அதனால் அந்த இரண்டு மாத குழந்தையை அந்த கலீல் ஷேக் கவனித்து வளர்த்து வந்தார் .ஆனால் நாளடைவில் அவர் வேலையையும் கவனித்து கொண்டு ,குழந்தையையும் வளர்க்க சிரமப்பட்டார் .அதனால் அந்த குழந்தையை அவர் எங்கேயாவது அனாதை ஆசிரமத்தில் சேர்க்க முயன்றரர் .ஆனால்  அவரின் மனைவி இல்லாததால் அது முடியவில்லை.

அதனால் அந்த பெண் குழந்தையை அவர் எங்காவது  வீசி விடலாம் என்று முடிவு செய்து கலீல் ஷேக் கடந்த செவ்வாய் கிழமையன்று கல்வாவிலிருந்து கல்யாண் வரை குழந்தையுடன் பயணம் செய்தார் .அதன் பிறகு கல்யாண் பகுதியில் உள்ள ஸ்கை வாக் அருகே குழந்தையை விட்டு விட்டு ஓடிவிட்டார் .அப்போது ஒரு குழந்தையை   அனைதையாக ஒருவர் விட்டு சென்றதை பார்த்த சில பெண்கள் போலீசில் புகார் கூறினார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த குழந்தையை கைப்பற்றி சைல்ட் உதவி மையத்தில் சேர்த்தார்கள் .பிறகு குற்றம் சாட்டப்பட்ட அந்த தந்தை  மீது  வழக்கு பதிவு அவரை கைது செய்தார்கள் .