“பால் கொடுக்காம கால் பண்ணுறியே?”-குழந்தைக்கு பால் கொடுக்காத மனைவியை கொன்ற கணவன் ..
ஒரு தாய் தன்னுடைய குழந்தை அழுவது தெரியாமல் போன் பேசிக்கொண்டிருந்ததால் கோபமுற்ற அவரின் கணவர் அவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது .
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தின் பிவாண்டி நகரில் பஜன்சிங் என்ற கணவரும் பூஜா என்ற பெண்ணும் என்ற மனைவியும் தங்களின் ஆறு மாத பெண் குழந்தையோடு வாழ்ந்து வந்தார்கள் .கடந்த ஞாயிற்று கிழமையன்று இரவு அவர்களின் பெண் குழந்தை பசியால் அழுதது .இதனால் அவரின் கணவர் பஜன்சிங் அவரின் மனைவியிடம் குழந்தைக்கு பால் கொடுக்க சொன்னார் .ஆனால் பூஜா அவர் கூறியதை கவனிக்காமல் யாருக்கோ கால் பண்ணி போனில் பேசிக்கொண்டிருந்தார்.
மேலும் அவரின் உடலில் நிறைய ரத்தக்காயங்கள் இருப்பதை பார்த்து சந்தேகப்பட்ட டாக்டர்கள் போலிஸுக்கு தகவல் சொன்னார்கள் .போலீசார் அவரை அவர்களின் குருத்வாரா கோயில் குரு ஹர்ஜீத் குஜ்ரால் மூலம் விசாரித்தபோது தான் மனைவியை கொலை செய்த விஷயத்தை ஒப்புக்கொண்டார் .பிறகு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்