×

” பிரியாணிக்காக பாய் வீட்டு பையனை கட்டிக்க போறியா “-முஸ்லிம் பையனை காதலித்த பெண்ணை, ஒரு தந்தை பண்ண வேலையை பாருங்க ..

குஜராத்தின் ராஜ்கோட் நகரில் கோபால் நகுல் என்பவரின் 19 வயது மகள், 20 வயது முஸ்லீம் மதத்தை சேர்ந்த காதலனை கல்யாணம் செய்து கொள்ள அடம்பிடித்ததால் ஆத்திரமடைந்த தந்தை அந்த பெண்ணை தலையிலடித்து கொலை செய்தார் . ராஜ்கோட் நகரில் இருக்கும் கோபால் நகுல் என்ற கூலி தொழிலாளியின் மனைவி கடந்த ஒரு மாதத்திற்க்கு முன்பு இறந்து விட்டார் .இதனால் அவர் மிகவும் மன வேதனையில் இருந்தார் .அப்போது அவரின் ஓரே மகள் அவரிடம் வந்து தான்
 

குஜராத்தின் ராஜ்கோட் நகரில் கோபால் நகுல் என்பவரின் 19 வயது மகள், 20 வயது முஸ்லீம் மதத்தை சேர்ந்த காதலனை கல்யாணம் செய்து கொள்ள அடம்பிடித்ததால் ஆத்திரமடைந்த தந்தை அந்த பெண்ணை தலையிலடித்து கொலை செய்தார் .

ராஜ்கோட் நகரில் இருக்கும் கோபால் நகுல் என்ற கூலி தொழிலாளியின் மனைவி கடந்த ஒரு மாதத்திற்க்கு முன்பு இறந்து விட்டார் .இதனால் அவர் மிகவும் மன வேதனையில் இருந்தார் .அப்போது அவரின் ஓரே மகள் அவரிடம் வந்து தான் ஒரு முஸ்லீம் பையனை காதலிப்பதாகவும் ,அவரையே தான் கல்யாணம் செய்து கொள்ள இருப்பதாகவும் ,நீங்கள் அவருக்கு என்னை கல்யாணம் செய்து தர மறுத்தால் தான் இந்த வீட்டில் இனி தண்ணீர் கூட குடிக்க மாட்டேன் என்று அடம் பிடித்தார் .
இதனால் கோபால் அவரின் மகள் மீது கடும் கோபத்திலிருந்தார் .இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று கோபால் தன்னுடைய மகளிடம் குடிக்க டீ கேட்டார் .ஆனால் அவர் தன் தந்தைக்கு டீ தர மறுத்து கோபமாக உட்கார்ந்திருந்தார் .அப்போது இதை பார்த்து கோபமுற்ற அவரின் தந்தை அருகிலுள்ள இரும்பு தடியை எடுத்து மகளின் தலையில் ஓங்கி அடித்தார் .இதனால் வலி தாங்க முடியாமல் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர் .ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அந்த பெண் இறந்தார் .இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர் .போலீஸ் விசாரணையில் அந்த பையனின் வீட்டிலும் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது

.