×

கள்ளக்காதலி மீது சந்தேகம் : மண்ணெண்ணெயை ஊற்றி எரித்து கொன்ற ரவுடி!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு மனைவியும், 10 வயதில் மகளும் உள்ளனர். இவர் மனைவியுடனான கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 நாட்களாக அவரை பிரிந்து வாழ்கிறார். இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவாகியுள்ளது. மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே அய்யம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதான கணவரை இழந்த பார்வதி சித்ரதுர்காவில் கல்குவாரியில் வேலை பார்த்த போது செந்தில்குமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பார்வதிக்கு 2 மகள்களும்
 

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு மனைவியும், 10 வயதில் மகளும் உள்ளனர். இவர் மனைவியுடனான கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 நாட்களாக அவரை பிரிந்து வாழ்கிறார். இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவாகியுள்ளது.

மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே அய்யம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதான கணவரை இழந்த பார்வதி சித்ரதுர்காவில் கல்குவாரியில் வேலை பார்த்த போது செந்தில்குமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பார்வதிக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

இதையடுத்து ஆந்திராவிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய பார்வதிக்கு வேறு சிலருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இதனால் செந்தில்குமார் பார்வதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணிக்கு அய்யம்புதூரில் உள்ள பார்வதி வீட்டிற்கு செந்தில்குமார் வந்துள்ளார். அப்போது அவர் வேறு ஒரு ஆணுடன் பேசி கொண்டிருந்துள்ளார். இதனால் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார் மறைத்து வைத்திருந்த பிளாஸ்டிக் டப்பாவில் இருந்த மண்ணெண்ணெயை பார்வதி, மீது ஊற்றிய செந்தில்குமார், அவர் மீது தீ வைத்து விட்டு ஓடி விட்டார். இதனால் உடல் கருகிதுடிதுடித்த பார்வதியை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் பார்வதி சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், செந்தில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .