×

காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த கள்ளக்காதலன் – கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு!!

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் சாந்தி. 46 வயதான இவர், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் துப்புரவு பணியாளராக உள்ளார். சாந்தி பணி முடிந்து பேருந்து நிலையத்திலேயே படுத்து தூங்குவாராம். இவர் நேற்று வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு தூங்கி கொண்டிருந்த போது, அதிகாலை 2 மணியளவில் அங்கு வந்த நபர் ஒருவர் சாந்தி மீது பெட்ரோலை ஊற்றினார். சாந்தி சுதாரித்து எழுவதற்குள் அவர் தீயை பற்றவைத்ததால் தீ வேகமாக பரவியது. அத்துடன் தான் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
 

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் சாந்தி. 46 வயதான இவர், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் துப்புரவு பணியாளராக உள்ளார். சாந்தி பணி முடிந்து பேருந்து நிலையத்திலேயே படுத்து தூங்குவாராம். இவர் நேற்று வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு தூங்கி கொண்டிருந்த போது, அதிகாலை 2 மணியளவில் அங்கு வந்த நபர் ஒருவர் சாந்தி மீது பெட்ரோலை ஊற்றினார். சாந்தி சுதாரித்து எழுவதற்குள் அவர் தீயை பற்றவைத்ததால் தீ வேகமாக பரவியது. அத்துடன் தான் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இருவரும் வலி தாங்க முடியாமல் அங்கும் இங்கும் அலறி துடித்தனர். இதை கண்டு அங்கிருந்தவர்கள் அலறி ஓடியதுடன், போலீசுக்கு தகவல் அளித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோயம்பேடு போலீசார் இருவரின் உடலையும்
கைப்பற்றி சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், சாந்தியை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டவர் சாந்தியின் கள்ளக்காதலன் முத்து(48) என்பதும், அவர் வடபழனி பேருந்து நிலையத்தில் துப்புரவு பணியாளராக இருந்ததும் தெரியவந்தது. சாந்திக்கு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதால் ஆத்திரத்தில் முத்து அவரை பெட்ரோல் ஊற்றிக்கொன்று விட்டு தற்கொலை செய்துகொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.