×

பெட்டி நிறைய நகை தராத மருமகளை, பெட்டிக்குள் பிணமாக்கிய மாமியார் -வரதட்சணை கொலையில் குடும்பமே கூண்டோடு கைது..

அலிகரில் வசிக்கும் ஜாபர் அலியின் மகள் பாரிஷா என்ற 25 வயது பெண் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்,. அவர் திருமணத்திற்கு பிறகு புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள அவரது மாமியார் வீட்டில் வசித்து வந்தார்.ஆனால் அந்த பெண்ணை அவரின் மாமியார் வீட்டில் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்துள்ளார்கள் இதனால் அந்தப் பெண்ணின் பெற்றோர் ஜூலை 25 ம் தேதி புலந்த்ஷாஹரில் மருமகனுக்கு எதிராக வரதட்சணை வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இதனால் கோபமுற்ற அந்த பெண்ணின் கணவர்
 

அலிகரில் வசிக்கும் ஜாபர் அலியின் மகள் பாரிஷா என்ற 25 வயது பெண் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்,. அவர் திருமணத்திற்கு பிறகு புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள அவரது மாமியார் வீட்டில் வசித்து வந்தார்.ஆனால் அந்த பெண்ணை அவரின் மாமியார் வீட்டில் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்துள்ளார்கள்


இதனால் அந்தப் பெண்ணின் பெற்றோர் ஜூலை 25 ம் தேதி புலந்த்ஷாஹரில் மருமகனுக்கு எதிராக வரதட்சணை வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இதனால் கோபமுற்ற அந்த பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து அந்த பெண்ணை கொன்று பிணத்தை ஒரு பெட்டிக்குள் அடைத்து ,காஸியாபாத் ரோட்டில் வீசிவிட்டு சென்றுள்ளனர் .
போலீசார் அந்த பெட்டியை கைப்பற்றி அந்த பெட்டிக்குள்ளிருக்கும் பெண்ணை யாரென்று கண்டறிய அங்குள்ள 1500க்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் குழுவில் அந்த பெண்ணின் போட்டோவை வெளியிட்டு தேடி வந்தனர் .இந்நிலையில் அந்த பெண்ணை அடையாளம் கண்டறிந்த ஒருவர் கூறிய தகவலின் அடிப்படையில் அந்த பெண் பாரிஸா என்று கண்டறிந்து ,அவரின் மாமியார் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.அப்போது போலீசாருக்கு அந்த வீட்டிலிருக்கும் கணவன் மற்றும் குடும்பத்தாரால் அந்த பெண் கொலை செய்யப்பட்டு பிணத்தை பெட்டியில் அடைத்து வீசிய விவரம் கிடைத்தது .பிறகு அந்த பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் அனைவர் மீதும் செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

.