×

பீர் வாங்கி கொடுத்தார் -பேண்ட்டில் கை வைத்தார் -சமூக ஊடக நண்பர் செயலால் நடந்த விபரீதம் .

பேஸ் புக் நண்பர் பாலியல் தொல்லை கொடுத்ததால் ,கொலை செய்யப்பட்ட சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது கிழக்கு டெல்லியின் திரிலோக்புரி பகுதியில் 22 வயது மோனு ,32 வயதான பாரத் என்பவருடன் பேஸ் புக் மூலம் நட்பு கொண்டார் .அதனால் இருவரும் அடிக்கடி இந்த சமூக ஊடகத்தின் மூலம் அரட்டையடித்து வந்தனர் .அதன் பிறகு இருவரும் ஒரு நாள் சந்திக்க முடிவு செய்தனர் .அதன் படி இருவரும் ஒரு இடத்தில் திங்கள்கிழமை சந்தித்து மது குடித்தார்கள் .அப்போது
 


பேஸ் புக் நண்பர் பாலியல் தொல்லை கொடுத்ததால் ,கொலை செய்யப்பட்ட சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது


கிழக்கு டெல்லியின் திரிலோக்புரி பகுதியில் 22 வயது மோனு ,32 வயதான பாரத் என்பவருடன் பேஸ் புக் மூலம் நட்பு கொண்டார் .அதனால் இருவரும் அடிக்கடி இந்த சமூக ஊடகத்தின் மூலம் அரட்டையடித்து வந்தனர் .அதன் பிறகு இருவரும் ஒரு நாள் சந்திக்க முடிவு செய்தனர் .
அதன் படி இருவரும் ஒரு இடத்தில் திங்கள்கிழமை சந்தித்து மது குடித்தார்கள் .அப்போது அந்த மது போதையில் மோனு அவரின் நண்பர் பாரத்திடம் பாலியல் உறவுக்கு வற்புறுத்தியுள்ளார் .அதை கேட்டு பாரத் மிகவும் அதிர்ச்சியடைந்தார் .அதனால் மது போதையிலிருந்த மோனு அவரின் நண்பரை தலையில் அடித்து கொலை செய்தார் .இதன் பிறகு அவரின் சடலத்தை அங்கேயே விட்டு விட்டு ரத்தக்கறை படிந்த ஆடைகளுடன் மோனு போலீஸ் ஸ்டேஷன் சென்றார் .
அங்கு அவரின் தோற்றத்தை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தார்கள் .பின்னர் அவரிடம் அவர்கள் விசாரித்த போது தன்னுடைய நண்பர் தன்னை பாலியல் உறவுக்கு அழைத்ததால் அவரை கொலை செய்து விட்டதாக கூறினார் .போலீசார் மோனு மீது கொலை வழக்கு பதிவு செய்தனர் .பின்னர் பாரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர் .போலீஸ் விசாரணையில், ‘குற்றம் சாட்டப்பட்ட மோனுவும் , பாரத்தும் பேஸ்புக் மூலம் சந்தித்ததாகவும், கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் நண்பர்களாக இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். சம்பவம் நடந்த நேரத்தில் அவர்கள் இருவரும் குடிபோதையில் இருந்ததாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.