×

“படுக்கையறை காட்சிகளை படம் பிடித்து மிரட்டுகிறார்” -கணவன் மீது மனைவி புகார்

அடமானம் வைத்துள்ள தன்னுடைய மனைவியின் நகைகளை அவர் திருப்பி கேட்டதால் அவரின் அந்தரங்க போட்டோக்களை ஊடகத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டிய கணவன் மீது போலிஸில் புகாரளிக்கப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் நாரன்புராவைச் சேர்ந்த 33 வயதான தனியார் நிறுவன ஊழியர் ஜிக்னேஷ் என்பவர் கின்ஜால் என்ற பெண்ணோடு 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் .அதன் பிறகு அவருக்கு தொழிலில் நட்டம் ஏற்பட்டதால் அவர் புதிதாக ட்ராவல்ஸ் நிறுவனம் தொடங்க முடிவு செய்தார் .அதன் காரணமாக தன்னுடைய
 

அடமானம் வைத்துள்ள தன்னுடைய மனைவியின் நகைகளை அவர் திருப்பி கேட்டதால் அவரின் அந்தரங்க போட்டோக்களை ஊடகத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டிய கணவன் மீது போலிஸில் புகாரளிக்கப்பட்டது.


குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் நாரன்புராவைச் சேர்ந்த 33 வயதான தனியார் நிறுவன ஊழியர் ஜிக்னேஷ் என்பவர் கின்ஜால் என்ற பெண்ணோடு 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் .அதன் பிறகு அவருக்கு தொழிலில் நட்டம் ஏற்பட்டதால் அவர் புதிதாக ட்ராவல்ஸ் நிறுவனம் தொடங்க முடிவு செய்தார் .அதன் காரணமாக தன்னுடைய மனைவியின் நகைகளை அடமானம் வைத்து சில லட்சங்கள் கடனாக பெற்றார் .பின்னர் தன்னுடைய மனைவி இடம் இந்த நகைகளை கூடிய விரைவில் மீட்டு தருவதாக உறுதியளித்து அவரை அவரின் தாயார் வீட்டுக்கு அனுப்பிவைத்தார் .
அதன் பின்னர் சில மாதங்களுக்கு பிறகு அவருக்கு இந்த தொழிலிலும் நஷ்டம் ஏற்பட்டதால் அவரின் மனைவியின் துணிகள் மற்றும் உடைமைகளை அவரின் அம்மா வீட்டிற்கு கொடுத்தனுப்பி தன்னுடைய மனைவியிடம் நம்முடைய திருமண பந்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக கூறினார் .
இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட அந்த பெண் கின்ஜால் தன்னுடைய நகைகளும் போனது ,தன்னுடைய திருமண வாழ்க்கையும் போனதால் மன உளைச்சளுக்கு ஆளானார் .இதனால் தன்னுடைய தந்தையின் உதவியால் தன்னுடைய கணவர் மீது நகைகளை திருப்பி தருமாறு வழக்கு பதிவு செய்தார் .இந்த விஷயம் கேள்விப்பட்ட அவரின் கணவன், தான் மனைவியோடிருக்கும் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பியுள்ளார் .மேலும் தன் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெற வில்லையெனில் இந்த அந்தரங்க போட்டோக்களை ஊடகத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார் .இதனால் போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்துவருகின்றனர் .