×

“நிர்வாண வீடியோ எடுத்து நிர்மூலமாக்குவோம் “-பிரசவம் பார்த்த பெண் டாக்டரை மிரட்டிய கணவர் .

ஒரு பெண்ணுக்கு சிசேரியன் மூலம் பிரசவம் பார்த்த ஒரு பெண் டாக்டரை, பீஸ் கொடுக்காமலிருக்க அந்த பெண்ணின் கணவரே மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் அஹமதாபாத்தின் உள்ள ஒரு மகளிர் மருத்துவமனையில் ஷீலா நாயக் என்ற பெண் மருத்துவர் பணிபுரிந்தார் .ஆகஸ்ட் 17ம் தேதியன்று அங்கு பிரசவத்திற்காக பானு என்ற பெண்ணை அவரின் கணவர் கூட்டி வந்தார் .அப்போது அந்த பெண்ணுக்கு அந்த பெண் டாக்டர் சிசேரியன் செய்து ஆண் குழந்தையை வெளியே எடுத்தார் .அதன்
 

ஒரு பெண்ணுக்கு சிசேரியன் மூலம் பிரசவம் பார்த்த ஒரு பெண் டாக்டரை, பீஸ் கொடுக்காமலிருக்க அந்த பெண்ணின் கணவரே மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது.


குஜராத் மாநிலம் அஹமதாபாத்தின் உள்ள ஒரு மகளிர் மருத்துவமனையில் ஷீலா நாயக் என்ற பெண் மருத்துவர் பணிபுரிந்தார் .ஆகஸ்ட் 17ம் தேதியன்று அங்கு பிரசவத்திற்காக பானு என்ற பெண்ணை அவரின் கணவர் கூட்டி வந்தார் .அப்போது அந்த பெண்ணுக்கு அந்த பெண் டாக்டர் சிசேரியன் செய்து ஆண் குழந்தையை வெளியே எடுத்தார் .
அதன் பிறகு ஆகஸ்ட் 20ம் தேதி இரவு, பானுவின் கணவர் அமிர்கான் பதான், மூன்று நபர்களுடன் டாக்டரின் அலுவலகத்திற்குள் நுழைந்து, ஆபாசமாக பேசி வன்முறையில் இறங்கினார் என்று மருத்துவர் கூறினார். மேலும் அவர் பில்களை செலுத்த மாட்டார் என்றும், பில்களை செலுத்தும்படி அவரிடம் கேட்டால், அவரைக் கடத்தி நிர்வாண வீடியோக்களை படமாக்குவதாகவும்,மேலும் அவரை கொலை கூட செய்ய தயங்கமாட்டோம் என்று அவர் சொன்னதாக அவர் கூறினார். .

“சம்பவம் நடந்தபோது, ​​நான் என் அலுவலகத்தில் என் இரவு ஊழியர்களுடன் தனியாக இருந்தேன். நோயாளியின் நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அவளுக்கு அவசரகால அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.அதன்பிறகு அந்த அறுவை சிகிச்சை பில் தொகையை செலுத்த சொன்னபோது அவர்கள் தகராறில் ஈடுபட்டார்கள் .அதனால் நான் காவல்துறையிடம் ஒரு புகாரை தாக்கல் செய்தேன், ”என்று டாக்டர் நாயக் கூறினார்

நாயக்கின் புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் குற்றவியல் மிரட்டல் மற்றும் துஷ்பிரயோகம் செய்ததற்காக அமீர்கான் பதான் மற்றும் சில நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.