×

“டாடி பக்கத்து வீட்டு அங்கிள் படு மோசம் ..” -கதறிய மகளால் கலங்கிய தந்தை.

பக்கத்து வீட்டில் விளையாட சென்ற நாலு வயதான சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார் . ஜார்க்கண்டின் ராம்கர் மாவட்டத்தில் உள்ள விகாஸ் நகர் பகுதியில் வசிக்கும் அஜய் துரி என்ற வாலிபருக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை .படித்து விட்டு வேலையில்லாமல் செல்போனில் பலான படங்களை பார்த்தும் கேம் விளையாடியும் பொழுதை கழித்து வருகிறார் .இந்நிலையில் அவரின் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர் தன்னுடைய நான்கு வயதான
 

 பக்கத்து வீட்டில் விளையாட சென்ற நாலு வயதான சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார் .

ஜார்க்கண்டின் ராம்கர் மாவட்டத்தில் உள்ள விகாஸ் நகர் பகுதியில் வசிக்கும் அஜய் துரி என்ற வாலிபருக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை .படித்து விட்டு வேலையில்லாமல் செல்போனில் பலான படங்களை பார்த்தும் கேம் விளையாடியும் பொழுதை கழித்து வருகிறார் .இந்நிலையில் அவரின் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர் தன்னுடைய நான்கு வயதான மகளோடு வசித்து வருகிறார் .

அந்த சிறுமி அடிக்கடி அந்த அஜய் என்பவன் வீட்டுக்கு விளையாட செல்வார் .

அப்போதெல்லாம் அந்த அஜயும் அந்த சிறுமியோடு விளையாடுவார் .ஆனால் அவரின் மனதில் அப்போது காம பிசாசு குடியிருந்தது தெரியாமல் அந்த சிறுமியின் தந்தை அவரோடு விளையாட அனுப்பியுள்ளார் .

அதன் படி கடநத வியாழக்கிழமையன்று அந்த சிறுமி வழக்கம் போல அந்த அஜய் வீட்டுக்கருகில் விளையாடிக்கொண்டிருந்தார் .அப்போது வெளியே போய் விட்டு வந்த அஜய் அந்த சிறுமியை வீட்டிற்குள் அழைத்தார் .

நம்ம பக்கத்து வீட்டு அங்கிள் தானே கூப்பிடுகிறார் என்று நம்பி அந்த சிறுமி அந்த வீட்டிற்குள் சென்றார் .அப்போது அந்த அஜய் அந்த நாலு வயதான சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றார் .அப்போது சிறுமி கத்தி கூச்சலிட்டார் .அதனால் அவரை அந்த வாலிபர்  வெளியே துரத்தி விட்டார் .அதன் பிறகு அந்த  சிறுமி நடந்த விஷயத்தை  தன்னுடைய தந்தையிடம் அழுது கொண்டே கூறினார் .அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் தந்தை தன்னுடைய பக்கத்து வீட்டு வாலிபர்  அஜய் மீது போலீசில் புகார் கூறினார் .போலீசார் அந்த சிறுமியை கூப்பிட்டு விசாரணை நடத்தியபோது இந்த விஷயம் ஊர்ஜிதமானது .அதன் காரணமாக அஜய் துரி  மீது போக்ஸோ சட்டத்தில்  வழக்கு பதிவு செய்தார்கள் .