×

இளம்பெண்ணின் ஆபாச படத்தை, கணவருக்கு அனுப்பி மிரட்டிய நபர் கைது

கோவை கோவையில் இளம்பெண்ணின் ஆபாச புகைப்படத்தை கணவரின் செல்போனுக்கு அனுப்பி மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைதுசெய்து, சிறையில் அடைத்தனர். கோவை சுந்தராபுரம் பகுதியை திருமணமான 32 வயது பெண்ணுக்கு, அதே பகுதியை சேர்ந்த சந்திரன் (40) என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வந்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் சந்திரனை கண்டித்து விரட்டிய நிலையில், அவர் மலுமிச்சம்பட்டி பகுதியில் தங்கியிருந்து, மீண்டும் அந்த பெண்ணிற்கு தொல்லை அளித்து வந்துள்ளார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு
 

கோவை

கோவையில் இளம்பெண்ணின் ஆபாச புகைப்படத்தை கணவரின் செல்போனுக்கு அனுப்பி மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைதுசெய்து, சிறையில் அடைத்தனர்.

கோவை சுந்தராபுரம் பகுதியை திருமணமான 32 வயது பெண்ணுக்கு, அதே பகுதியை சேர்ந்த சந்திரன் (40) என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வந்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் சந்திரனை கண்டித்து விரட்டிய நிலையில், அவர் மலுமிச்சம்பட்டி பகுதியில் தங்கியிருந்து, மீண்டும் அந்த பெண்ணிற்கு தொல்லை அளித்து வந்துள்ளார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை, அவரது கணவருக்கு அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், புகார் அளித்த பெண்ணுக்கும், சந்திரனுக்கும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததும், இருவரும் தனிமையில் இருந்தபோது அவரை செல்போனில் புகைப்படம் எடுத்ததும் தெரியவந்தது. மேலும், சந்திரனின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து அந்த பெண் தொடர்பை துண்டித்ததால் ஆத்திரமடைந்து கணவருக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பியதும் தெரியவந்தது. இதனையடுத்து, சந்திரன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைதுசெய்து கோவை சிறையில் அடைத்தனர்.