×

நர்ஸ் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி மிரட்டியவர் கைது ! ஆபாச படம் அனுப்புமாறு நர்சை மிரட்டியதாக போலீசார் தகவல் !!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நர்ஸ் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி மிரட்டியவர் ஆபாச படம் கேட்டு அச்சுறுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதரபாத் அருகே நலகொண்டா பகுதியில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார் ஒரு பெண். அவருடன் வார்டு பாய் வேலை செய்து வந்தர் பார்ஷா அகில். இவர் உடன் பணிபுரியும் செவிலியர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி உள்ளார். பின்னர் செவிலியரிடம் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட அந்த நபர் நிர்வாண
 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நர்ஸ் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி மிரட்டியவர் ஆபாச படம் கேட்டு அச்சுறுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஐதரபாத் அருகே நலகொண்டா பகுதியில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார் ஒரு பெண். அவருடன் வார்டு பாய் வேலை செய்து வந்தர் பார்ஷா அகில். இவர் உடன் பணிபுரியும் செவிலியர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி உள்ளார். பின்னர் செவிலியரிடம் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட அந்த நபர் நிர்வாண படங்களை அனுப்பும்படி பிளாக்மெயில் செய்துள்ளார். அடிக்கடி வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு தொல்லைகொடுத்து வந்த அந்த நபர் தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்தும் அந்த பெண்ணுக்கு அனுப்பி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், போலிசாரிடம் புகார்அளித்தார்.

 

போலீஸ் நடத்திய விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் பெண்கள் நட்பை அதிகப்படுத்திக்கொள்ள நர்ஸ் பெயரில் போலி கணக்கை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த பெண்ணை ஆபாச படம் அனுப்புமாறு மிரட்டி உள்ளார். குற்றம் சாட்டப்பட்ட நபரின் செல்போன் எண்ணை வைத்து அவரை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர்.