×

"வெள்ளிக்கிழமையானா துள்ளி விளையாட வர சொல்றியே" -முதியவரிடம் சிக்கிய மூன்று பெண்கள்.  

 


மூன்று மைனர் சகோதரிகளை தனித்தனியே பலாத்காரம் செய்த 61 வயது முதியவருக்கு 29ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது .

தமிழகத்தின் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் வசிப்பவர் 61 வயதான கணபதி . இவர் இதே பகுதியில் வசிக்கும் தெய்வநாயகி என்பவருடைய 18 வயதுக்குட்பட்ட 3 சிறுமிகளை தனது வீட்டிற்கு வாரா  வாரம் வெள்ளிக்கிழமைகளில் பூஜைக்கு மற்ற பெண்களுடன் வரவழைத்துள்ளார்.அப்போது அந்த தெய்வநாயகியின் மூன்று மகள்களையும் தனித்தனியே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .இது பற்றி அந்த பெண்கள் தங்களின் தாயிடம் கூறினர் .அதை கேட்ட அந்த தாய் அந்த கணபதி மீது கடந்த 2019ம் ஆண்டு போலீசில் புகார் கூறினார் .போலீசார் அவரை கைது செய்து ,இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது .அதன் தீர்ப்பு சமீபத்தில் வெளியானது. 

இதனை  விசாரித்த நீதிபதி  குற்றவாளி கணபதிக்கு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மைனர் மீதான பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளை துன்புறுத்தியதற்காக தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 50 ஆயிரம் அபராதமும், தீவிரமான ஊடுருவுதல் பாலியல் தாக்குதல் பிரிவில் 5 வருட சிறை தண்டனையும், 50,000 அபராதமும், பெண்களை துன்புறுத்திய குற்றத்திற்காக 2 வருட சிறை தண்டனையும், 50,000 அபராதமும், ஆபாசமாக பேசியதற்காக 3 மாதமும், கொலை மிரட்டல் விட்டதற்காக 2 வருடம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.இதனால் அந்த கணபதி சிறையில்  அடைக்கப்பட்டார்