×

"தொண்டு செய்யுறேன்னு மாணவிகளை தொட்டு .."தொண்டு நிறுவனம் நடத்தியவரின்  பலான வேலை. 

 


இலவச பொருட்கள் தருவதாக ஆசை காமித்து மாணவிகளிடம் தகாத முறையில் நடந்த தொண்டு நிறுவன தாளாளரை போலீஸ் கைது செய்தது 


ஆந்திர மாநிலம்  விசாகபட்டினம் பிரகாஷ் நகர் பகுதியை சேர்ந்தவர்  தோமன் சின்னா ராவ்.  இவர் அதே பகுதியில் ஒரு தொண்டு நிறுவனம் நடத்தியம் ,பல அரசியல் தலைவர்க்குடன் நெருக்கமாகவும்  இருந்தார் .இந்நிலையில் அவர் பெயர் ரவுடிகள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது .இதற்கிடையே தான் அந்த பகுதி மக்களிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக அங்குள்ள பல பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக  பேனா ,பென்சில் ,ரப்பர் வழங்குவதாக அவர் அறிவித்தார் .
இதனால் அந்த பகுதியில் வசிக்கும் ஏழை மாணவிகள் அவரின் தொண்டு நிறுவனத்திற்கு படை எடுத்து சென்றனர் .அப்போது அந்த இலவச பொருட்கள் வாங்க  வந்த ஐந்தாம் வகுப்பு மாணவிகளிடம் அந்த தோமன் தகாத முறையில் தொட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் அங்கிருந்து அழுதுகொண்டே சென்று ,தங்களுக்கு நேர்ந்த கொடுமை பற்றி தங்களின் பெற்றோரிடம் கூறினர் .பின்னர் பொது மக்கள் அந்த தோமன் நடத்தும் தொண்டு நிறுனத்துக்குள் புகுந்து அவரை தாக்கினர் .பின்னர் போலீசார் அந்த இடத்திற்கு வந்து  அந்த தோமனை  கைது செய்தனர் .