×

"ஊருக்கு கூட்டி போகாம இப்படி உடலுறவு கொல்லுறிங்களே" -உறவினர்களை  நம்பி சென்ற கல்யாணமான பெண்ணுக்கு நேர்ந்த கதி 

 


35 வயது திருமணமான பெண் இருவரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளர்.

 
ராஜஸ்தான் மாநிலத்தில் தௌசா மாவட்டத்தில் உள்ள  ஜெய்ப்பூர் மாவட்டத்தின் பஸ்ஸி கிராமத்தில் வசிக்கும் 35 வயதான கல்யாணமான பெண் ஞாயிற்றுக்கிழமை காலை தௌசாவில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு செல்ல ஜெய்ப்பூரில் இருந்து பேருந்தில் புறப்பட்டு சென்றுள்ளார்.
பிறகு தௌசாவில் உள்ள தனது கிராமத்தின் பேருந்து நிலையத்துக்கு வந்த அவர், தனது பெற்றோரின் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தார், அப்போது அங்கு வந்த அவரின் உறவினர் இருவர் தங்கள் வாகனத்தில் லிப்ட் கொடுப்பதாக கூறியுள்ளனர். முதலில் அவர் மறுத்த நிலையில், நாங்கள் உங்கள் உறவினர்கள் தான் எனக் கூறி கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று, அவரை சுமார் 3 மணி நேரமாக மாறி மாறி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அவர்கள் அந்தப் பெண்ணைக் கொன்று, அவரது உடலை கிணற்றில் வீசினர்
பின்னர் அவரது பெற்றோர் ஞாயிற்றுக்கிழமை மாலை தவுசாவின் ராம்கர் பச்சவாரா காவல் நிலையத்தில் தங்கள் மகளை காணவில்லை என்று புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து 
 , குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கலுராம் மீனா என்பவரை கைது செய்து , மற்ற குற்றவாளிகளைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீசார் கூறினர்