×

"நம் உடலுறவு காட்சிகளை உன் உறவினரிடம்  காண்பிப்பேன்" -பெண்ணை மிரட்டி வேட்டையாடிய வாலிபரால்  வந்த விபரீதம் 

 

சமூகவலைதளம் மூலம் பழகி 15 வயதான பெண்ணை காதலிப்பது போல நடித்து .பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தின் சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த 22 வயதான கோகுல்ராஜ்  என்பவர்  சமூகவலைதளம் மூலம் பழகி, 15 வயது சிறுமியை காதலித்து வந்தார். அதன் பின்னர் அந்த பெண்ணிடம் தான் நேரில் சந்திக்க வேண்டும் என்று கேட்டதால் ,அவர் தன் பெற்றோர் இல்லாத நேரமாக பார்த்து வீட்டுக்கு வரச்சொன்னார் .இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திய கோகுலராஜ் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரை மயக்கி பலாத்காரம் செய்தார் .அப்போது அவருக்கு தெரியாமல் அதை வீடியோவும் எடுத்து வைத்து கொண்டார் 
ஒரு கட்டத்தில் சிறுமி விழித்துக்கொண்டு, கோகுல்ராஜின் காம களியாட்டத்துக்கு மறுத்து விட்டார். இதனால் கோபம் கொண்ட கோகுல்ராஜ், அவருடன் உடலுறவு கொண்ட  செல்போன் படக்காட்சிகள் தன்னிடம் இருப்பதாகவும், அவற்றை அவரின்  பெற்றோரிடம் காட்டி விடுவேன் என்றும் மிரட்டி சிறுமியை மீண்டும் உடலுறவுக்கு அழைத்தார்.
இதனால் அந்த பெண் கோபம் கொண்டு ,அந்த பெண் தன்னுடைய பெற்றோரை அழைத்து கொண்டு கோகுல் ராஜ் மீது அங்குள்ள போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் அந்த கோகுல்ராஜ் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர் .