×

"ஊருக்குத்தான்  நான் புருஷன்,உறவுக்கு பாய் ஃபிரெண்டா?" -ஆண் நண்பர்களுடன் அலைந்த மனைவிக்கு நேர்ந்த சோகம்  

 


மனைவியை தவறான நடத்தையால் ஒரு கணவர் அவரை கொன்றதால்  கைது செய்யப்பட்டார். 


உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த நபர் ஹரிஷ் பிரம்மா.இவரது மனைவி 22 வயதான ரசியா கத்துனா.. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் .இவர்கள் இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்  .அந்த ரசியா ஏற்கனவே முதல் கணவரை விட்டு பிரிந்து இரண்டாவதாக ஹரிஷை காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்  
 அப்பெண் ரசியாவுக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருந்துள்ளனர்.. அவர்களுடன் தொடர்ந்து போனில் பேசிவந்துள்ளார். இந்த விஷயம் ஹரிஷூக்கு தெரியவந்ததையடுத்து, மனைவியை கண்டித்துள்ளார்.. ஆனாலும் ஆண் நண்பர்களை அவர் கைவிடாமல் இருந்ததால் அவர்களுக்குள்  சண்டை மீண்டும் வந்தபோது, ஆத்திரம் தீராமல் கீழே கிடந்த கட்டையை எடுத்து ரசியாவை ஹரிஷ் தாக்கி கொன்றுள்ளார். போலீசார் இந்த கொலை பற்றி வழக்கு பதிந்து ஹரிஷை கைது செய்து விசாரித்த போது பல உண்மைகள் வெளியானது 
உயிரிழந்த ரசியா  ஏற்கனவே கல்யாணமாகி கணவரை பிரிந்தவர் .
அந்த கதையை கேட்டுதான் ஹரிஷுக்கு பரிதாபமும் காதலும் ஏற்பட்டுள்ளது. பின்னர் தனியாக வீடு எடுத்து 3 மாதங்களாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.அப்போதுதான் ஒருநாள் யதேச்சையாக ரசியாவின் போனை ஹரிஷ் பார்த்தபோது, பல ஆண்களுடன் இரவு நேரங்களில் , ரசியா பேசிவந்ததும், அவர்கள் எல்லாம் ரசியாவின் ஆண் நண்பர்கள் என்பதும் தெரியவந்தது. கடைசியில் கொலை வரை வந்து, இப்போது ஹரிஷ் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.