×

"டேய் நீ தாலி கட்டிக்கோ ,நான் ஜாலியா இருந்துக்கிறேன்" -நண்பரின் மனைவியை டீல் பேசியதால் நேர்ந்த பயங்கரம் 

 

மனைவியுடனான கள்ளக்காதலை கண்டித்ததால் வாலிபரை கொன்று உடலை எரித்த நண்பர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் சிந்தகடா பகுதியில் வசித்து வந்த சந்தோசும்   பரசுராமும்,நண்பர்கள் ஆவார். இதனால் சந்தோஷ் வீட்டிற்கு பரசுராம் அடிக்கடி சென்று வந்து உள்ளார்.அப்போது சந்தோஷ் மனைவியின் அழகில் அவரின் நண்பர் மயங்கினார் .இதனால் அவரை அடைய திட்டமிட்டு அடிக்கடி நண்பர் வீட்டுக்குள் வந்து ,அவரின் மனைவிக்கு ஆசை வலை விரித்தார் .அவர் விரித்த வலையில் அவரின் நண்பர் மனைவி  விழுந்ததும் இருவரும் சந்தோசுக்கு தெரியாமல் ஜாலியாக இருந்து வந்தனர் .
ஒரு கட்டத்தில் சந்தோசுக்கு இந்த கள்ள காதல் விவகாரம் தெரிய வந்ததும் ,அவர் தன்னுடைய நண்பர் பரசுவை  கண்டித்துள்ளார் .ஆனால் அந்த பரசுராமன் அந்த  கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் சந்தோசை தீர்த்துக்கட்ட  முடிவு செய்தார்.
 அதன்படி கடந்த 1-ந் தேதி சந்தோசை சந்திக்க கனகரகி கிராமத்திற்கு பரசுராம் வரவழைத்தார். பின்னர் 2 பேரும் ஒன்றாக அமர்ந்து மதுகுடித்து உள்ளார்கள் . போதை தலைக்கு ஏறியதும் சந்தோஷ் நிலைதடுமாறி பரசுவிடம் கள்ள காதல் பற்றி சண்டை போட்டார் . இதனால்   சந்தோசை மோட்டார் சைக்கிளில் ஏற்றிகொண்டு நிலத்திற்கு சென்ற பரசுராம், அங்கு வைத்து சந்தோசின் கழுத்தை துண்டால் இறுக்கி படுகொலை செய்துள்ளார். பின்னர் நிலத்தில் அவரது உடலை வீசிவிட்டு உடலின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து உள்ளார்.
விவசாய நிலத்தில் உள்ள பயிர்கள் மீது பரவி தீ  எரிந்ததும்  போலீசார் விரைந்து வந்து அந்த பரசுராமை கைது  செய்தனர். இந்த கொலையில் சந்தோசின் மனைவிக்கும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.